Home> Movies
Advertisement

சிவகார்திகேயன் கண்ணீர் விட்டார் ஏன் தெரியுமா?

சிவகார்திகேயன் கண்ணீர் விட்டார் ஏன் தெரியுமா?

கடந்த வாரம் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ரெமோ. இந்த படத்தில் சிவகார்திகேயன், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சதீஷ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றிக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ப்ரெஸ் மீட் நடைபெற்றது. இந்த ப்ரெஸ் மீட்டில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிருத், படத்தொகுப்பாளர் ரூபன் பாராட்டுகள் தெரிவித்தனர். 

இதனைதொடர்ந்து ப்ரெஸ் மீட்டில் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவை பற்றி பேசும் போது சிவகார்த்திகேயன் கண்ணீர் விட்டார்.ரெமோ திரைப்படம் வெளிப்படுத்துவதற்கு பெரிதும் போராடியதாகவும் மற்றும் பலர் படம் வெளிவர விடாமல் தொல்லைகள் கொடுத்ததாகவும் அவர் கண்ணீர் விட்டு கூறினார்.

 மேலும் அவர் தன்னை வேலை செய்ய விடுமாறு வேண்டுகோள் விடுத்தார். தான் அழுததை குறித்து "நான் எல்லா மேடையிலும் அழுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் உண்மையாக இருக்கிறேன். ஒவ்வொரு வெற்றிக்கும் போராடுகிறேன்" என்றும் ப்ரெஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் கூறினார்.

Read More