Home> Movies
Advertisement

சுந்தர் சி படத்தில் விஜய் சேதுபதி! கோலிவுட்டில் உருவாகும் புதிய கூட்டணி!

அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தில் விஜய் சேதுபதியை வைத்து, சுந்தர்.சி இயக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.    

சுந்தர் சி படத்தில் விஜய் சேதுபதி! கோலிவுட்டில் உருவாகும் புதிய கூட்டணி!

சமீப காலமாக தமிழ் சினிமாவில் அதிகளவில் ஹாரர் படங்களின் வரவுகள் அதிகரிக்க தொடங்கிவிட்டது.  அதில் பலரும் அதிகம் ரசித்து பார்த்த படங்கள் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் ஒவ்வொரு பாகங்களும் தான்.  கடந்த 2014ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் முதல் பாகத்தில் ஹன்சிகா மோத்வானி, வினய், ஆண்ட்ரியா, சுந்தர்.சி, கோவை சரளா, மனோபாலா, ராய் லட்சுமி, சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர்.  அதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு வெளியா அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தில் சுந்தர்.சி, சித்தார்த், ஹன்சிகா மோத்வானி, திரிஷா, பூனம் பஜ்வா, கோவை சரளா, மனோபாலா, சூரி  ஆகியோர் நடித்திருந்தனர்.  கடந்த 2021ம் ஆண்டில் வெளியான அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தில் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, ஆர்யா, சுந்தர்.சி, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர்.

மேலும் படிக்க | விஜய் ஆண்டனிக்கு மேலும் ஒரு சர்ஜரி: ஐசியூவில் எப்படி இருக்கிறார்?

fallbacks

ஒவ்வொரு பாகத்திலும் திகிலூட்டும் வகையில் பிரம்மாண்டமான அரண்மனைகள் இடம்பெற்று இருக்கும்.  கடந்த 2005ம் ஆண்டில் பிரபு, ரஜினி, ஜோதிகா, நயன்தாரா ஆகியோரது நடிப்பில் திகில் நிறைந்த கதையம்சத்துடன் வெளியான 'சந்திரமுகி' படத்தை தொடர்ந்து பல பேய் படங்கள் தமிழில் வர தொடங்கியது.  இதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.  இதுபோன்ற படங்களும் பாக்ஸ் ஆபிசில் சிறந்த அளவில் வசூலை வாரி குவித்தது.  அரண்மனை படத்தின் ஒவ்வொரு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை இயக்குனர் சுந்தர்.சி உருவாக்க போகிறார்.

fallbacks

அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தில் விஜய் சேதுபதியை வைத்து, சுந்தர்.சி இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மக்கள் செல்வனாக திரையுலகில் கலக்கி கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  கதாநாயகன், வில்லன் என பல பரிமாணங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறார்.  இதுபோன்ற திகில் நிறைந்த கதையம்சம் கொண்ட படங்களில் விஜய் சேதுபதி நடிப்பது இது முதல் தடவையல்ல.  இதற்கு முன்னர் திகில் கதையம்சம் நிறைந்த  'பீட்சா' படத்தில் விஜய் சேதுபதி நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்றிருந்தார்.  அரண்மனை-4 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப்போவது குறித்த அதிகார்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.  இருப்பினும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் உடன் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தில் நடிக்கிறார்.

மேலும் படிக்க | மனோஜ்குமார் மஞ்சு - வருண் இணையும் “வாட் த ஃபிஷ்” 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More