Home> Movies
Advertisement

Upasana Kamineni: “இதனால்தான் தாமதமாக தாயாக முடிவு செய்தேன்” அன்னையர் தினத்தில் உண்மையை உடைத்த உபாசனா!

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ராம் சரணின் மனைவி உபாசனா, தனது முதல் அன்னையர் தினத்தை கொண்டாடுவதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   

Upasana Kamineni: “இதனால்தான் தாமதமாக தாயாக முடிவு செய்தேன்” அன்னையர் தினத்தில் உண்மையை உடைத்த உபாசனா!

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா, மகதீரா என்ற படம் மூலம் அறிமுகமாகி இன்று தெலுங்கு சூப்பர் ஸ்டாராக உயரும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடித்திருந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்த வருடத்தின் ஆஸ்கர் விருதையும் தட்டிச்சென்றது. இவருக்கும் அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர், பிரதாப் சி.ரெட்டியின் பேத்தியான உபாசனா காமினேனிக்கும் 2012ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. 

பெற்றோர்களாக உள்ள ராம் சரண்-உபாசனா

ராம் சரணுடன் திருமணம் ஆன புதிதில் பலவித விமர்சனங்களை எதிர்கொண்டார் உபாசனா. மகதீரா படத்தின் ரிலீஸிற்கு பிறகு ராம் சரண் புகழின் உச்சியில் இருந்த காலம் அது. அவரை திருமணம் செய்து கொண்ட உபாசனா கொஞ்சம் கூட அவருக்கு பொருத்தமானவராக இல்லை என பலரும் தங்களது வாய்க்கு வந்தவாறு பேசினர். திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை என்ற பிற்போக்குத்தனமாக விமர்சனங்களையும் இவர்கள் சந்தித்தனர். இந்த நிலையில், உபாசனா கர்பமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சமீபத்தில்தான் உபாசனாவிற்கு வளைகாப்பு வைபோகமும் நடைப்பெற்றது. 

மேலும் படிக்க | Parineeti Chopra: ஆம் ஆத்மி எம்.பியை மணக்கிறார் பரினீதி சோப்ரா..களைகட்டிய நிச்சயதார்த்த கொண்டாட்டம்!

தாமதமான கர்பம்..

உபாசனா, சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், அவரது தாமதமான கர்பம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திருமணமான புதிதிலேயே குழந்தை மற்றும் வாழ்க்கையில் தாங்கள் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் குறித்து பேசியதாக கூறினார். “நாங்கள் இருவரும் தொழில் ரீதியாக எங்களுக்கு வேண்டிய இடத்தை பிடித்த பிறகே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம். அதைத்தான் இப்போதும் செய்திருக்கிறோம். நான் தாயாக வேண்டும் என முடிவு செய்ததில் மிகவும் பெருமையடைகிறேன்” இவ்வாறாக தனது பேட்டியில் கூறியுள்ளார் உபாசனா. மேலும், எங்களது குழந்தைக்கு தேவையான வாழ்க்கையை நாங்கள் தர வேண்டும் என நினைத்ததால் தான் தாமதமாக தாயாக முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார் உபாசனா. 

ட்விட்டரில் நெகிழ்ச்சி

இன்று உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, பல பிரபலங்கள் இது குறித்த பதிவுகளை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். உபாசனாவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “எல்லா சரியான காரணங்களுக்காகவும் தாய்மையை ஏற்றுக்கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன்” எனக்கூறியுள்ளார். மேலும், “எனது குழந்தைக்கு முழுமையான அன்பு மற்றும் பாசத்தை அளிக்க நான் உணர்வு பூர்வமாக தயாரான பிறகே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். அதையே செய்திருக்கிறேன். எனது முதல் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறேன்” என நெகிழ்ச்சியான பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் உபாசனா. 

ஜூலையில் குழந்தை பிறக்க வாய்ப்பு? 

உபாசனா கர்பமாக இருக்கிறார் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாத்தில் வெளியானது. இதையடுத்து, உபாசனா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டிருந்தார். அதில் நடிகர் ராம் சரண் நல்ல தந்தையாக இப்போதிலிருந்தே நடந்து கொண்டு வருவதாகவும் ஜூலை மாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும் படிக்க | Actor Vijay: அரசியலில் களமிறங்கும் தளபதி? 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியடவுள்ளதாக தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More