Home> Movies
Advertisement

பொன்னியின் செல்வன்: வைரலாகும் த்ரிஷா எடுத்த BTS படம்

ஐத்ராபாத் நகரங்களில் படப்பிடிப்புகள் முடிந்த பின், தற்பொழுது படக்குழு மத்திய பிரதேசத்தில் உள்ள ஆர்ச்சா நகருக்கு சென்றுள்ளது. 

பொன்னியின் செல்வன்: வைரலாகும் த்ரிஷா எடுத்த BTS படம்

மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முக்கிய நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இதற்கான படப்பிடிப்புகள் தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன.

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) படப்பிடிப்பு சமீபத்தில் பாண்டிச்சேரியில் மீண்டும் தொடங்கப்பட்டது. ஐஸ்வர்யாராய், கார்த்தி உள்ளிட்டோர் இங்கு கலந்து கொண்டனர். பின்பு அங்கிருந்து ஐதராபாத் சென்ற பொன்னியின் செல்வன் படக்குழு அங்கு படப்பிடிப்பு நடத்தி வந்தது.

ALSO READ | Ponniyin Selvan shoot update: இறுதிகட்ட படப்பிடிப்பில் பொன்னியின் செல்வன்

இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தை ஒரே சமயத்தில் எடுத்து வருகிறார் மணிரத்தினம். சமீபத்தில் இப்படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியது. சுந்தர சோழர் - பிரகாஷ் ராஜ், ஆதித்ய கரிகாலன் - விக்ரம், அருள்மொழி வர்மன் - ஜெயம் ரவி, வந்தியத் தேவன் - கார்த்தி, குந்தவை - த்ரிஷா, நந்தினி - ஐஸ்வர்யா ராய், பூங்குழலி - ஐஸ்வர்யா லட்சுமி, வானதி - ஷோபிதா, பெரிய பழுவேட்டரையர் - சரத்குமார், சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன், கடம்பூர் சம்புவரையர் - நிழல்கள் ரவி, மலையமான் - லால், ஆழ்வார்க்கடியான் நம்பி - ஜெயராம், அநிருத்த பிரம்மராயர் - பிரபு, சோமன் சாம்பவன் - ரியாஸ் கான் என்று முக்கிய நடிகர் நடிகைகள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள காட்சிகளை படமாக்க படக்குழு வேகமாக செயல்பட்டு வருகிறது. ஐத்ராபாத் நகரங்களில் படப்பிடிப்புகள் முடிந்த பின், தற்பொழுது படக்குழு மத்திய பிரதேசத்தில் உள்ள ஆர்ச்சா நகருக்கு சென்றுள்ளது. 

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார். அதில் ஆர்ச்சா கோயிலின் விமானத்துடன் இணைந்து படப்பிடிப்பு கேமராவை படம் பிடித்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிறது.

ALSO READ | அட பாவிங்களா! ரசிகர்கருக்கு வெங்கட் பிரபு அளித்த பதில்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More