Home> Movies
Advertisement

ஃபேஸ்புக் லைவில் விஷம் குடித்த பிரபல நடிகர்..என்ன காரணம் தெரியுமா?

பாலிவுட்டில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் நடிகராகவும் உள்ள த்ரிதானந்த் ராவ் என்ற நடிகர் ஃபேஸ்புக் லைவ்வில் விஷம் குடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஃபேஸ்புக் லைவில் விஷம் குடித்த பிரபல நடிகர்..என்ன காரணம் தெரியுமா?

பாலிவுட்டில் தொலைக்காட்சி பிரபலமாகவும் நடிகராகவும் வலம் வருபவர், த்ரிதானந்த். இவர், தி கபில் ஷர்மா ஷோ என்ற நிகழ்ச்சி மூலம் பலரால் அறியப்பட்டார். இவர், தனது ஃபேஸ்புக் லைவ்வில் பேசிக்கொண்டிருக்கும் போது விஷம் குடித்துள்ளார். 

தொலைக்காட்சி பிரபலம்:

இந்தியில் மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சிகளுள் ஒன்று, தி கபில் ஷர்மா ஷோ. இதில், பாலிவுட்டின் காமெடி நடிகரான கபில் ஷர்மா தொகுப்பாளராக உள்ளார். இவருடன் சேர்ந்து இந்த ஷோவில் பங்கேற்றவர், த்ரிதானந்த் ராவ். பாலிவுட்டின் பிரபல நடிகராக விளங்கும் நானா படேகரின் குரலில் பேசி பலரை அசத்திய மிமிக்கிரி கலைஞர் இவர். இவருக்கு, பல லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் த்ரிதானந்த், சமீபத்தில் ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ மூலம் ரசிகர்களிடம் பேசினார். அப்போது யாரும் எதிர்பாராத வகையிலான ஒரு காரியத்தை அவர் செய்தார். 

மேலும் படிக்க | கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பிரபல நடிகை!

லைவ்வில் விஷம் குடித்த நடிகர்:

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் லைவ் வந்த த்ரிதானந்த் ராவ், தனது வாழ்வில் நடக்கும் சில விஷயங்களை அவர் ரசிகர்களிடம் ஷேர் செய்ய தொடங்கினார். அதில், தனது வாழ்க்கையில் உள்ள ஒரு பெண்ணால் தனக்கு மனஉளைச்சளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அதனால் விஷம் குடிப்பதாகவும் கூறிவிட்டு அருகில் இருந்த க்ளாசை எடுத்து மடக் மடக் என குடித்துவிட்டார். இத்தோடு, அந்த லைவ் வீடியோவும் முடிந்து விட்டது. 

மருத்துவமனையில் அனுமதி:

நடிகர் விஷம் குடித்ததையடுத்து அவருக்கு என்னாச்சோ ஏதாச்சோ என ரசிகர்கள் அலறி விட்டனர். இதையடுத்து, தற்போது கிடைத்துள்ள தகவல்களில் அவர் விஷம் கொடுத்த உடனே அவரை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்துவிட்டதாகவும், தற்போது அவர் நலமாக வீடு திரும்பி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னரும் தற்கொலை முயற்சி:

த்ரிதானந்த், 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போதும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனது காதலி தன்னிடம் பணம் கேட்டு தொல்லை செய்வதால் இந்த முடிவை எடுப்பதாக அவர் அப்போது கூறியிருந்தார். அப்போதும் அவரை நண்பர்கள்தான் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தனக்கு பணக்கஷ்டம் நிறைய இருந்ததாலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதாலும் அந்த முடிவை தேர்ந்தெடுத்ததாக அவர் கூறியிருந்தார். 

மேலும் படிக்க | கொலையா? தற்கொலையா? 3 ஆண்டுகள் கடந்து தீரா மர்மமாக இந்தி நடிகரின் மரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More