கவிஞர் வைரமுத்து பாலியல் சர்ச்சையில் சிக்கியது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இளம்பெண் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதாக பகிர்ந்த தகவலை பாடகி சின்மயி தன்னுடைய டிவிட்டரில் பகிர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சினிமா துறையில் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களை பிரபல நடிகைகள் எழுப்பி வருகின்றனர். "ME TOO" என்ற ஹேஸ்டாக்கை பயன்படுத்தி பலரும் தங்களது நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். " எனக்கு 18 வயது இருக்கும். வைரமுத்து அவர்களுடன் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அவர் மீது அதிக மரியாதை வைத்திருந்தேன்.
அப்பொழுது ஒரு நாள் பாடல் வரிகளை பற்றி விளக்கம் தந்துக் கொண்டிருந்தேன். திடீரென என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே அந்த இடத்திலிருந்து ஓடி வந்துவிட்டேன், என்று அவரது அனுபவத்தை பகிர்ந்திருந்தார்". இந்த விவகாரம் குறித்து பாடகி சின்மயி, தனது டிவிட்டர் பக்கத்தில் ரீ டிவிட் செய்துள்ளார்.
Adding another victim’s story. pic.twitter.com/ZrId3wPfrO
— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018
I cannot stop shaking.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 8, 2018
My Friend will remain anonymous.@vairamuthu
Why people cannot share at the risk of their careers.
And bloody hell #MeToo!! pic.twitter.com/REj1UcTxtL
பெண் ஒருவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரை கூறியுள்ளது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.