Home> Movies
Advertisement

சூர்யா - செல்வராகவன் படத்தின் அடுத்த அப்டேட் இதோ!

`தானா சேர்ந்த கூட்டம்' படத்தை அடுத்து நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு படமாக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

சூர்யா - செல்வராகவன் படத்தின் அடுத்த அப்டேட் இதோ!

`தானா சேர்ந்த கூட்டம்' படத்தை அடுத்து நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு படமாக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில் செல்வராகவன் அவரது டிவிட்டரில் ஆறு இருக்கும் பகுதியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தார். ஆனால் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தும் போது அங்கு மக்கள் கூட்டம் கூடி படப்பிடிப்பு தடைபட வாய்ப்பு இருப்பதால், இறுதியாக செட் போட்டு படப்பிடிப்பு நடத்த படக்குழு  திட்டமிட்டிருந்தார். 

இதையடுத்து அம்பாசமுத்திரம் போன்று செட் ஒன்றையும் படக்குழு தற்போது அமைத்து வருவதாக கூறப்படுகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

Read More