Home> Movies
Advertisement

சீயான் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் எஸ்ஜே சூர்யா!

சித்தா படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அருண்குமார் விக்ரமின் 62வது படத்தை இயக்கி வருகிறார்.  சியான்62 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.  

சீயான் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் எஸ்ஜே சூர்யா!

தமிழ் சினிமாவின் தனித்துவமான நட்சத்திர நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘சீயான் 62’.  இந்த படத்தில் நட்சத்திர இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இணைந்திருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறார்கள். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் யு. அருண்குமார் இயக்கத்தில் ‘சீயான் 62’ எனும் படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார் மற்றும் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தை முன்னணி தயாரிப்பு  நிறுவனமான ஹெச் ஆர் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் மகள் ரியா ஷிபு, பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். 

மேலும் படிக்க | Rio Raj: மனைவிக்காக ஸ்பெஷல் போட்டோக்களை பதிவிட்ட ரியோ! வைரலாகும் புகைப்படங்கள்..

இப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் இன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் அண்மைக்காலமாக எந்த வேடம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையான நடிப்பால் அசத்தி, ‘நடிப்பு அரக்கன்’ எனும் நற்பெயரை சம்பாதித்திருக்கும் எஸ். ஜே. சூர்யா, இந்த படத்தின் நட்சத்திர பட்டியலில் இணைந்திருக்கிறார். அத்துடன் எஸ். ஜே. சூர்யா அவருடைய திரைப்பயணத்தில் இது வரை பார்த்திராத. முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இதனை படக்குழு பெருமையுடன் தெரிவித்துள்ளது.  சீயான் விக்ரமும், எஸ் ஜே சூர்யாவும் முதன்முறையாகக் கூட்டணி அமைத்திருப்பதால் ‘சீயான் 62’ படத்திற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் புதிய அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சியான் 62 படத்திற்கான முதல் அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. சித்தா படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருந்த சமயத்தில் இந்த வீடியோ வெளியானது. அந்த அறிவிப்பு டீஸரில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் முதல் காட்சி தொடங்கியது.  ஒரு பெண் தன் குழந்தையுடன் ஸ்டேஷனுக்குள் வேகமாக வருகிறார். காவல் அதிகாரிகளிடம் தான் தாக்கப்பட்டதாகவும், தன்னை காப்பாற்று மாறும் கூறுகிறார். இதற்கு பின்பு விக்ரம் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார்.  டீஸர் பார்க்கும் போதே படம் வேறொரு தரத்தில் இருப்பது நமக்கு தெரிகிறது.  இந்நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கி உள்ளது.

மேலும் படிக்க | அடேங்கப்பா.. கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More