Home> Movies
Advertisement

இன்ஸ்டாவில் கண்ணீர் விட்டு கதறும் நடிகை சதா... எதற்கு தெரியுமா?

Actress Sadaa: ஜெயம், அந்நியன் படம் மூலம் மிகவும் பரிட்சயமான நடிகை சதா, தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் அழுதுகொண்டு பேசிய வீடியோ தற்போது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இன்ஸ்டாவில் கண்ணீர் விட்டு கதறும் நடிகை சதா... எதற்கு தெரியுமா?

Actress Sadaa: ஜெயம் படத்தில் போயா.... போ... என்று நாயகன் ஆசையாக விரட்டும் சுஜாதா, அம்பியை உயிராக நேசித்த நந்தினி என தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் நடிகை சதா. தமிழில் சில படங்களின் மூலம் பிரபலமடைந்த அவர், தற்போது தனது சொந்த வியாபாரம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். 

வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதில் இவருக்கு அளவுகடந்த காதல். விலங்குகள் மீதான இவரின் ஈர்ப்பை பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக அறிந்திருப்பார்கள். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் சோகமாக கண்ணீருடன் காட்சியளித்த சதாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தெலுங்கில் அறிமுகம்

சதா மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர். சதாவின் உண்மையான பெயர் சதாப் முஹம்மது சையத். ரத்னகிரியில் உள்ள சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு, தெலுங்கில் ஜெயம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தேஜா இயக்கிய, அந்த திரைப்படம் 2002இல் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகும். அதன் மூலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முழு வாய்ப்பு கிடைத்தது.

ஜெயம் ரவி 'ஜெயம்' ரீமேக் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாக, அதே படத்தில் இவரும் அறிமுகமானார். அதன் பிறகு, ஒரு சில தமிழ் படங்களில் கதாநாயகியாக மாறினார். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த அந்நியன் படத்தின் வெற்றி சதாவுக்குப் பெருமை சேர்த்தது. பின்னர் இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்தார். zeenews.india.com/tamil/videos/viral-post-of-jeyam-ravis-wife-410146

மேலும் படிக்க | Jawan Update: பொறுத்தது போதும்..வந்தாச்சு ஜவான் பட அப்டேட்..ரிலீஸ் எப்போது தெரியுமா?

வியாபாரத்தில் முழு கவனம்

மோனாலிசா என்ற கன்னட படமும், பாலிவுட் படமான கிளிக் படமும் அவருக்கு வெகுவான பாராட்டைப் பெற்றுத்தந்தது. சதா 2018இல் தமிழ் திரைப்படமான டார்ச் லைட்டில் பாலியல் தொழிலாளியாக நடித்தார். படத்தின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. பின்னர், சதா நடிப்பில் இருந்து விலகி மும்பையில் வியாபாரத்தில் கவனம் செலுத்தினார்.

சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் சதா, இப்போது தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் கண்ணீர் விட்டு அழுதார். தனது வணிக நிறுவனம் உள்ள இடத்தின் உரிமையாளர் தன்னை அந்த இடத்தை காலி செய்யும்படி கூறியதாக சதா கண்ணீருடன் தெரிவித்தார். சதா அங்கு நல்ல ஓட்டலை நடத்தி வந்தார். 

சதா வருத்தம்

"கஃபே மூலம் நான் எதைப் பெற்றாலும், என் இதயமும் ஆன்மாவும் அதில் உள்ளன. நான் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் அங்கு வேலை செய்கிறேன். மிகுந்த அன்புடனும் ஆர்வத்துடனும் அந்த நிறுவனத்தை முன்னெடுத்துச் சென்றேன். தொழிலுக்காக என் மற்ற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டேன். கட்டடத்தின் வாடகை சரியாக செலுத்தப்பட்டது. ஆனாலும், நான் காலி செய்ய வேண்டும் என்று இடத்தின் உரிமையாளர் சொல்கிறார். இப்படி நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை" என சதா வருத்தத்துடன் தெரிவித்தார். 

உற்சாகமூட்டும் ரசிகர்கள்

கஃபே மே மாதத்தில் மட்டுமே திறக்கப்படும், எனவே வழக்கமான வாடிக்கையாளர்கள் எப்போதும் உணவகத்திற்குச் சென்று தங்களுக்கு விருப்பமான உணவை உட்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அவருக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். உணவகத்தை நிரந்தரமாக மூடாமல், வேறொரு இடத்தில் உணவகத்தை திறக்கும்படி ரசிகர்கள் அவருக்கு ஊக்கமளித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | சமந்தா மிகவும்... கஸ்டடி பட பிரமோஷனில் விவாகரத்து பற்றி நாக சைதன்யா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More