Home> Movies
Advertisement

டெலிவரி பாயிடம் சேட்டை... கடைசியில் வாந்தி எடுத்த சேது, சுபாஷ் - இன்றைய சீதா ராமன் எபிசோட்!

Seetha Raman Serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீதா ராமன் தொடரின் இன்றைய எபிசோட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

டெலிவரி பாயிடம் சேட்டை... கடைசியில் வாந்தி எடுத்த சேது, சுபாஷ் - இன்றைய சீதா ராமன் எபிசோட்!

Seetha Raman Serial Today Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல், சீதா ராமன். இந்த சீரியலில் சீதாவும், மீராவும் சமைத்து சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

சீதாவுக்கு அவமானம்

அதாவது, சீதாவும் மீராவும் கஞ்சியை சமைத்து சாப்பிட்டு கொண்டிருக்க ராம், மகா, அர்ச்சனா, சுபாஷ், சேது ஆகியோர் சாப்பாடு ஆர்டர் செய்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதை பார்த்த சீதா சாப்பிடுறீங்களா என கேட்க அவர்கள் உன் சாப்பாடு எங்களுக்கு ஒன்னும் தேவையில்லை என திட்டி தீர்க்கின்றனர்.

fallbacks

மேலும் படிக்க | பிரைம் வீடியோவின் 'மாடர்ன் லவ் சென்னை' முன்னோட்டம் வெளியீடு

கோபமான டெலிவரி பாய்

இதனை தொடர்ந்து எல்லாரும் டெலிவரி பாய்க்கு போன் செய்து எங்க இருக்க என கேட்டு கொண்டே இருக்கின்றனர். பிறகு டெலிவெரி பாய் சாப்பாடு எடுத்து வர வாட்ச் மேன் நான் கொடுத்தால் சாப்பிட மாட்டாங்க, நீயே கொடுத்துடு என சொல்லி டெலிவெரி பாயை உள்ளே அனுப்ப மகா, அர்ச்சனா ஆகியோர் உனக்கு சாப்பாடு கொண்டு வர இவ்வளவு நேரமா என சத்தம் போட டெலிவெரி பாய் கோபமடைகிறான். 

சாப்பாட்டை கொடுக்க மறுப்பு

'உங்களுக்காக வெயில்ல கஷ்டப்பட்டு டிராபிக்ல நின்னு நின்னு வரேன். ஆனால் நீங்க இப்படி பேசறீங்க' என கோபப்பட்டு சாப்பாட்டை எடுத்து கொண்டு கிளம்ப மகா, சேது மற்றும் சுபாஷிடம் அவனிடம் பேசி சாப்பாட்டை வாங்க சொல்கிறாள். பிறகு சுபாஷும் சேதுவும் பேச டெலிவரி பாய் 'சாப்பாடு கொடுக்க முடியாது' என உறுதியாக சொல்கிறான். 

fallbacks

சமையலால் வந்த வாந்தி

இதனால் எல்லாரும் கடுப்பாக சீதா, 'இன்னமும் கஞ்சி அங்க தான் இருக்கு, சாப்பிடுங்க' என சொல்ல மகாவும் அர்ச்சனாவும், 'நாங்களே சமைக்க போறோம்' என சொல்லி கிச்சனுக்கு வந்து எந்த பொருள் எங்க இருக்குனு தெரியாமல் குழம்புகின்றனர். பிறகு ஒரு வழியாக சமைத்து முடிக்க அதை சாப்பிடும் சேது, சுபாஷ் வாந்தி எடுக்கின்றனர். இதை பார்த்து சீதாவும் மீராவும் சிரிக்கின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பஞ்சாயத்தில் அவமானப்பட்ட ரங்கநாயகி..அடுத்தது என்ன?மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More