Home> Movies
Advertisement

விஜய்யுடன் தீராத மனக்கசப்பு... ஆத்திரத்தின் உச்சியில் எஸ்.ஏ.சி?

விஜய் மீது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆத்திரத்தின் உச்சியில் இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

 விஜய்யுடன் தீராத மனக்கசப்பு... ஆத்திரத்தின் உச்சியில் எஸ்.ஏ.சி?

விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே இருக்கும் மனக்கசப்பு இன்னமும் தீர்ந்தபாடில்லை. விஜய்யை நடிகராக மாற்றிய எஸ்.ஏ.சந்திரசேகர் அவரை அரசியலிலும் ஈடுபடுத்த முடிவு செய்து பல செயல்களை செய்தார்.

ஆரம்பத்தில் அவருக்கு பிடிக்கொடுத்த விஜய் பிற்காலத்தில் பொதுப்பணிகளில் தன்னுடைய ரசிகர் மன்றங்களை ஈடுபட வைத்தார். மேலும் ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறியது.

fallbacks

ஆனால், விஜய் மக்கள் இயக்கம் விவகாரம்தான் அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே எழுந்த மனக்கசப்பின் முதல் புள்ளி என்று பலரால் கருதப்படுகிறது.

எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவு நிர்வாகிகளை மக்கள் இயக்கத்திலிருந்து விஜய் நீக்கியதற்கு பின்னால் சிலர் இருப்பதாக வெளிப்படையாகவே அவர் பேச ஆரம்பித்தார்.

மேலும் படிக்க | விஜய்யை கலாய்த்துவிட்டு தற்போது நன்றி கூறும் கோமாளி இயக்குனர்!

இதனையடுத்து தன் பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் கூட்டக்கூடாது என தந்தைக்கும், தாய்க்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் விஜய்.

சூழல் இப்படி இருக்க சமீபத்தில் எஸ்.ஏ.சி தனது 81ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டத்தில் விஜய் கலந்துகொள்ளாதது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது.

fallbacks

தாயையும், தந்தையையும் கடைசிக்காலத்தில் விஜய் தவிக்கவிட்டுவிட்டார் என ஒரு தரப்பினர் கூற, அது அவர்களது குடும்ப விவகாரம் இதில் ஏன் அவசியமில்லாமல் தலையிட வேண்டும் என மறுதரப்பினர் கூறினர்.

இந்த விவாதம் நடந்துகொண்டிருந்தபோதே திருக்கடையூரில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஆயுஷோமம் (ஆயுள் விருத்திக்கான யாகம்) நடந்தது. அப்போது விஜய் பெயரில் சந்திரசேகரும், ஷோபாவும் அர்ச்சனை செய்தனர்.

fallbacks

இந்நிலையில், விஜய்யின் மக்கள் இயக்கம் வலுவிழந்துவிட்டதாக பேட்டி ஒன்றில் எஸ்.ஏ.சி கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்துவிட்டது என்பதை விஜய் சிந்திக்க வேண்டும்.

விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்படுவார்கள். நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் இணைப்பது குறித்து பலமுறை விஜய்யிடம் பேசியிருக்கிறேன்.விஜய்க்கு ஷூட்டிங் இருந்ததால் அவரால் எனது பிறந்தநாளுக்கு வரமுடியவில்லை” என்றார்.

மேலும் படிக்க | தாய், தந்தையை தனியாக தவிக்கவிட்ட விஜய்?

ஏற்கெனவே பிறந்தநாள் விவகாரம் எரிந்துகொண்டிருக்க தற்போது விஜய் மக்கள் இயக்கம் குறித்து எஸ்.ஏ.சி பேசியிருப்பதன் மூலம் அவர் ஆத்திரத்தின் உச்சியில் இருக்கிறாரோ என்றும், விஜய்யை சுற்றி இருக்கும் சிலர்தான் விஜய்க்கும், எஸ்.ஏ.சிக்கும் இடைவெளியை ஏற்படுத்திவிட்டனர். இதனை உடனடியாக சரி செய்யவேண்டும் என்றும் கூறுகின்றனர் நண்பாஸும், நண்பிகளும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More