Home> Movies
Advertisement

ஜீ-தமிழ் சேனலில் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக "மெர்சல்"

பொங்கலுக்கு சிறப்பு திரைப்படமாக ஜீ-தமிழில் ஜனவரி 14-ம் தேதி மாலை 04:00 மணிக்கு ‘மெர்சல்’ ஒளிபரப்படுகிறது.

ஜீ-தமிழ் சேனலில் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்தது. இந்தப் படத்தில் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, சத்யராஜ், வடிவேலு, சத்யன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 

கடந்த தீபாவளிக்கு ரிலீஸான ‘மெர்சல்’ படம் வருகிற பொங்கலுக்கு சிறப்பு திரைப்படமாக ஜீ-தமிழில் ஜனவரி 14-ம் தேதி மாலை 04:00 மணிக்கு ஒளிபரப்படுகிறது.

 

Read More