Home> Movies
Advertisement

பூஜையில் எல்லாரையும் பதற வைத்த மனோகரி! நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்!

Ninaithen Vandhai: வெள்ளிக்கிழமை எபிசோடில் ஜோசியர் இந்த வீட்டில் நல்லது நடக்க பூஜை ஒன்றை செய்ய வேண்டும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

பூஜையில் எல்லாரையும் பதற வைத்த மனோகரி! நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் ஜோசியர் இந்த வீட்டில் நல்லது நடக்க பூஜை ஒன்றை செய்ய வேண்டும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்க அஞ்சலி இன்னைக்கு எப்படியாவது ஸ்கூல் கட் அடிக்கணும் என்று திட்டம் போட்டு சுடர் ரூமுக்குள் வந்து ஒளிய இதை சுடர் பார்த்து விட அஞ்சலி சுடர் தாலி வைத்திருக்கும் பேக்கை எடுத்து கொண்டு ஓடி பொய் எழில் ரூமில் ஒளிந்து கொள்கிறாள். 

மேலும் படிக்க | வசூலை வாரிக்கும் மகாராஜா.. விஜய் சேதுபதி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க

சுடர் எழில் ரூமுக்குள் போக முடியாமல் வெளியே நின்றபடி அஞ்சலி வெளியே வா ஸ்கூல் போகணும் என்று சொல்லி கூப்பிட்டு கொண்டிருக்க எழில் வர அஞ்சலி கையில் இருக்கும் தாலியை துணிக்குள் மறைத்து விடுகிறாள். பிறகு எழில் அஞ்சலியை ஒழுங்கா ஸ்கூலுக்கு போகணும் என்று அனுப்பி வைக்கிறாள். இதை தொடர்ந்து பூஜைக்காக தயாராகும் எழில் வேட்டை சட்டை அணிந்து தோளில் துண்டு போட்டு கொண்டு தயாராக அஞ்சலி மறைத்து வைத்த தாலி அந்த துண்டுக்குள் மாட்டி கொண்டு தொங்க எழில் இதை கவனிக்காமல் இருக்கிறாள். 

fallbacks

பிறகு எழில் வந்து பூஜையில் உட்கார அய்யர் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சேர்ந்து தான் இந்த பூஜையை செய்யணும் என்று சொல்ல எழிலும் கனகவல்லியும் அதிர்ச்சி அடைகின்றனர், கனகவல்லி எழில் மட்டும் தனியாக பண்ண கூடாதா என்று கேட்க ஜோடியா உட்கார்ந்து பண்ணுறது தான் முறை என்று ஐயர் சொல்கிறார். இதையடுத்து மனோகரி நான் எழில் பக்கத்துல உட்க்காருறேன், அவர் எனக்கு புருஷன் மாதிரி தான் என்று சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர், கனகவல்லி நீ என்னமா பேசுற என்று கேட்க ஆமாம் மா எழிலும் நானும் சின்ன வயசுல இருந்தே ப்ரண்ட்.. அவன் மனைவிக்கு பதிலா நான் உட்காரதுல என்ன தப்பு இருக்கு என்று கேட்டு பக்கத்தில் உட்கார போக வெளியில் இருந்து ஆவியாக பார்க்கும் இந்து அதிர்ச்சி அடைய எழில் எழுந்து விட மனோகரி அதிர்ச்சி அடைகிறாள். 

என் மனைவியோட இடத்தை யாருக்கும் தர மாட்டேன் என்று சொல்லி மேலே சென்று இந்துவின் போட்டோவை கொண்டு வர இதை பார்த்த இந்து இன்னும் நான் உங்க மனசுல வாழ்ந்திட்டு தான் இருக்கேனா என்று சந்தோசப்படுகிறாள். பிறகு எழில் பூஜையில் இந்து போட்டோவை வைத்து பக்கத்தில் உட்கார்ந்து பூஜையை செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பிக்பாஸ் 7 பிரதீப் ஆண்டனியின் காதலி இவர்தான்..! வைரலாகும் போட்டோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More