Home> Movies
Advertisement

மெர்சல்-க்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

மெர்சல்-க்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’மெர்சல்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

முன்னதாக ’மெர்சல்’ படத்தின் தலைப்பிற்கு தடை விதிக்க கோரி மெர்சலாயிட்டேன் என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் வழக்கு தொடந்தார்.

இம்மனுவை விசாரித்த தனி நீதிமன்றம் ’மெர்சல்’ என்ற தலைப்பு வர்த்தகக் குறியீட்டின் படி பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதற்கு சட்ட அங்கீகாரம் உள்ளதாகவும் அதற்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இதற்கு எதிராக தயாரிப்பாளர் ராஜேந்திரன் `மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ராஜிவ் சக்தேர், சுரேஷ்குமார் ஆகியோர் தெரிவித்ததாவது,  ’மெர்சல்’ காப்புரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதால் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்

எனவே மெர்சல் படம் தடைகள் இன்றி திட்டமிட்டப்படி தீபாவளி அன்று வெளியாக உள்ளது!

Read More