Home> Movies
Advertisement

Maari Serial: சாமுண்டீஸ்வரியை கொல்ல நெருங்கிய ரவுடி, கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட் என்ன?

Zee Tamil, Maari Serial Today Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாரி சீரியலில் இன்றைய எபிசோட் குறித்த அப்டேட்டை இங்கு காணலாம். 

Maari Serial: சாமுண்டீஸ்வரியை கொல்ல நெருங்கிய ரவுடி, கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட் என்ன?

Zee Tamil, Maari Serial Today Update: தமிழ் வெள்ளித்திரை நடிகை, நடிகர்களை விட சின்னத்திரை நடிகை, நடிகர்களுக்கு மவுஸ் ஜாஸ்தி... உதாரணத்திற்கு, ரியல் எஸ்டேட் விளம்பரம் தொடங்கி பல விளம்பரங்களில் சீரியல் நடிகர், நடிகைகள்தான் தோன்றுகிறார்கள். அந்தளவிற்கு தொலைக்காட்சி தொடர் என்பது தமிழ்நாட்டில் மட்டுமில்லை நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மகளிர் மட்டுமின்றி இரவில் வீட்டில் ரிலாக்ஸ் செய்யும் குடும்பத் தலைவர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணியில் ஓய்வுபெற்ற பெரியோர் என பலரும் தினந்தோறும் தங்களுக்கு விறுவிறுப்பை தருகின்ற தொலைக்காட்சி தொடரை பார்க்கவே விரும்புகின்றனர். அந்த வகையில், தமிழில் பல தொலைக்காட்சி தொடர்கள் இருந்தாலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுகின்றன.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன், அண்ணா, சந்தியாராகம், வீரா, நினைத்தேன் வந்தாய், கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல தொடர்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி

இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் சங்கரபாண்டி வைத்த பழத்தை சிவா கிளி எடுக்க மாரிக்கு விஷனில் சாமுண்டீஸ்வரியை யாரோ குத்த வருவது போன்று தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்த அப்டேட்ட வெளியாகி உள்ளது. அதனை இதில் காணலாம்.

மேலும் படிக்க | முத்துப்பாண்டிக்கு வார்னிங் கொடுத்த டிஎஸ்பி - அண்ணா சீரியல் அப்டேட்!

அதாவது தீபா மாரி ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவில் பாட வந்து பாடி கொண்டிருக்க மாரி சாமுண்டீஸ்வரி அம்மாவுக்கு எதுவும் ஆக கூடாது என்று பதற்றத்தில் இருக்க சூர்யா சாமுண்டீஸ்வரி அம்மாவை யார் பின் தொடர்வது என்று நோட்டம் விட்டபடி இருக்க ரவுடி ஒருவன் சுற்றி கொண்டிருப்பதை கவனிக்கிறான். 

அந்த ரௌடி சாமுண்டீஸ்வரியை குத்த போக தடுத்தும் நிறுத்தும் சூர்யா அவனை பிடிக்க எஸ்கேப் ஆகும் ரவுடிக்கு தாராவுக்கு போன் செய்து குத்த போன கடைசி நொடியில் அந்த சூர்யா வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டான். என்னை நம்பி குடுத்த வேலையை என்னால செய்ய முடியாமல் போய்டுச்சு, இதுவரை எனக்கு இப்படி நடந்ததே இல்லை. 

என்னையே மண்ணை கவ்வ வைத்த அந்த சூர்யாவை சும்மா விட மாட்டேன் என்று ரவுடி கோபப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? ரவுடி சூர்யாவுக்கு எதிராக செய்ய போவது என்ன? என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

இந்த தொடர் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 2 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த தொலைக்காட்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மட்டுமின்றி Zee5 ஓடிடியிலும் காணலாம். 

மேலும் படிக்க | தீபாவுக்கும் ரக்சனுக்கும் என்ன தொடர்பு? மீடியாவில் தீயாய் பரவும் செய்தி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More