Home> Movies
Advertisement

ராஜராஜ சோழன் இந்துவா இல்லையா?... கவிஞர் சினேகன் சொல்லும் பதில்

ராஜராஜ சோழன் குறித்து வெற்றிமாறன் கூறிய கருத்து தொடர்பாக கவிஞரும், பாடலாசிரியருமான சினேகன் விளக்கமளித்துள்ளார்.

 ராஜராஜ சோழன் இந்துவா இல்லையா?... கவிஞர் சினேகன் சொல்லும் பதில்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான திருமாவளவனுக்கு எடுக்கப்பட்ட விழா ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், “சினிமா என்னும் கலையை சரியாக நாம் கையாள வேண்டும். அப்படி கையாள தவறும்போதுதான்  நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து பறிக்கப்படுகிறது.  வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். அவரின் இந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பாக பொன்னியின் செல்வன் படம் வெளியான சமயத்தில் அவர் இப்படி பேசியதால் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்று விவாதத்தையும் கிளப்பியது. ராஜராஜ சோழன் இந்து இல்லாமலா சிவன் கோயிலை கட்டினார் என பாஜக, இந்து முன்னணியினர் கேள்வி எழுப்பினர். அதேசமயம், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து என்ற மதம் இல்லை சைவம், வைணவம் என்றுதான் இருந்தது என சீமான் உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தனர்.

fallbacks

இந்தச் சூழலில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஹாசன், “ ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது வைணவம், சைவம், சமணம் என்றுதான் இருந்தது. வெள்ளைக்காரர்கள் எப்படி அழைப்பது என்று தெரியாமல் இந்து என்றார்கள். தூத்துக்குடியை Tuticorin என்று சொன்னதுபோல்” என்றார். அதேசமயம், கமல் இந்து மதத்தின் இருப்பை மறுக்கவில்லை என கூறியதாக அவரது நண்பர் விளக்கமளித்திருந்தார்.

மேலும் படிக்க | நயன்தாரா குழந்தைகளின் வாடகை தாய் யார் தெரியுமா?... வெளியான தகவல்

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இருப்பவரும், கவிஞரும், பாடலாசிரியருமான சினேகன்; தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சி உறுப்பினர்கள் செய்துவரும் நலத்திட்ட உதவிகளின் 50ஆவது நாளான நேற்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ நல்ல கலைஞன் எந்த பிரிவினைகளுக்கும் சிக்கமாட்டான். அரசியலை சினிமாவாகவும் சினிமாவை அரசியலாகவும் பார்க்காமல்; கலைஞன் கலைஞனாக இருந்தால் எந்த கலைஞனையும் பிரிவினைவாதத்திற்குள் கொண்டு போக முடியாது

ஆரம்பத்திலேயே காஞ்சி பெரியவர் மற்றும் எழுத்தாளர் சோ ஆகியோர் கூறிய கருத்துதான் வெற்றிமாறனின் கருத்து. அந்த காலத்தில் இந்து மதம் என்பது இல்லை. அதன்பின் பண்பட்ட ஒரு பண்பாடு இங்கு சேர்ந்து அதற்கு பெயர் வைத்தார்கள் என்று படித்ததை வெற்றிமாறன் கூறினார்.அது அவருடைய கருத்து” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More