Home> Movies
Advertisement

கார்த்திகை தீபம்: கார்த்தியின் காலில் விழுந்த தர்மலிங்கம்...! ராஜஸ்ரீ போடும் புது திட்டம்

என் பொண்ணை உங்ககிட்ட ஒப்படைத்து விட்டோம். அவளை நல்லபடியா பார்த்துக்கோங்க என சொல்லி கார்த்தியின் காலில் விழுந்து விடுகிறார் தர்மலிங்கம்.   

கார்த்திகை தீபம்: கார்த்தியின் காலில் விழுந்த தர்மலிங்கம்...! ராஜஸ்ரீ போடும் புது திட்டம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா அருணாச்சலம் மற்றும் மீனாட்சியின் கணவர் ஆகியோர் ஒரு காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். வீட்டில் அபிராமி கார்த்திக்கை நட்சத்திராவுடன் மணக்கோலத்தில் பார்ப்பதற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறாள். இன்னொரு பக்கம் ரூபஸ்ரீ கார்த்தி எனக்கும் கிடைக்காமல் அந்த நட்சத்திராவுக்கும் கிடைக்காமல் இப்படி தீபாவுக்கு புருஷனா ஆகிட்டாரு, இதை சும்மா விடக்கூடாது என சொல்ல, ராஜஸ்ரீ நீ கவலைப்படாத அபிராமி கண்டிப்பா தீபாவை வெளிய அனுப்பிடுவாங்க. அடுத்து நட்சத்திராவை கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி செய்வாங்க. 

fallbacks

மேலும் படிக்க | அமுதாவும் அன்னலட்சுமியும்: வடிவேலுக்காக அன்னம் சொன்ன வார்த்தை.. அமுதா பதிலடி

அந்த சமயம் இந்த ஆதாரங்களை கொடுத்து நட்சத்திராவின் முகத்திரையை கிழித்து விடலாம். பிறகு வேற ஆப்ஷன் இல்லாமல் உன்னை கார்த்திக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க என சொல்கிறாள். பிறகு அபிராமி வீட்டிற்குள் இருக்க கார் சத்தம் கேட்டு ஆரத்தி தட்டுடன் வெளியே எழுந்து வர கார்த்திக் இல்லாமல் மற்றவர்கள் மட்டும் வந்திருப்பதை பார்த்து எங்கே கார்த்திக் என கேட்க, அவங்க கோவிலுக்கு போய் இருப்பதாக சொல்கின்றனர். பிறகு அபிராமி கார்த்திக்கு போன் போட்டு விசாரிக்க கோவிலுக்கு வந்திருக்கோம் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவோம் என சொல்கிறான். பிறகு ராஜ ஸ்ரீ, தர்மலிங்கம் வீட்டுக்கு போய் நல்லா இருக்கீங்களானு உங்கள கேட்க முடியாது, ரொம்ப நல்லாவே இருப்பீங்க.. என்னென்னமோ திட்டம் போட்டு தீபாவை கார்த்திக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க என சொல்ல, மைதிலி இது எல்லாம் சிவாவோட வேலை தான். 

fallbacks

எங்களுக்கு எதுவும் தெரியாது. கார்த்திக்கின் கல்யாண மண்டபத்துக்கு வர சொன்னதும் நாங்க வந்த பிறகுதான் தீபா கழுத்தில் அவர் தாலி கட்டிய விஷயம் தெரியும் என சொல்கிறாள். அடுத்து கார்த்திக், தீபா, செல்ஃபி பாட்டி, மீனாட்சி ஆகியோர் காரில் வந்து தர்மலிங்கம் வீட்டில் இறங்க, அவர்களை உள்ளே அழைத்து வந்து பாலும் பழமும் கொடுக்க கார்த்திக் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். செல்ஃபி பாட்டி இதெல்லாம் சம்பிரதாயம் என சொல்லி இருவரையும் பாலும் பழமும் சாப்பிட வைக்கிறார். அதன் பிறகு தர்மலிங்கம் மற்றும் ஜானகி இருவரும் கார்த்திக்கிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லி அவனை அழைத்துச் சென்று இப்போ நாங்க என்ன சொல்றதுன்னு தெரியாம இருக்கோம். இந்த தர்ம சங்கடமான சூழ்நிலையில் நாங்க என்ன சொன்னாலும் அது பொய் என்று கூட நீங்க நினைக்கலாம். 

ஆனா உண்மையாகவே எங்களுக்கு இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடுவில் யாரோ ஏதோ கேம் விளையாடி இருக்காங்க என சொல்கிறார்கள். பிறகு தர்மலிங்கம் என் பொண்ணை உங்ககிட்ட ஒப்படைத்து விட்டோம். அவளை நல்லபடியா பார்த்துக்கோங்க என சொல்லி கார்த்தியின் காலில் விழுந்து விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மதுமிதாவை மீட்ட மகா.‌. சீதா விடும் சவால் - இன்றைய எபிசோட் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More