Home> Movies
Advertisement

கமல் வழக்கு: காவல் துறைக்கு கூடுதல் அவகாசம்!!

இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கில் காவல் துறை ஆணையர் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கமல் வழக்கு: காவல் துறைக்கு கூடுதல் அவகாசம்!!

இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கில் காவல் துறை ஆணையர் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் பிரபல தமிழ் வர பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அந்த கட்டுரையில் ‘இந்து தீவிரவாதம் இல்லை’ என்று கூறமுடியாது என கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். கமல்ஹாசன் கருத்துக்கு பல பாஜக கட்சி தலைவர்கள் மற்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். 

இதனிடையே, இந்துக்கள் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டதாக கமல் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிடகோரி, சென்னை ஐகோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று \விசாரணைக்கு வந்தது. அதில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை காவல் துறை ஆணையர் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு கூடுதல் அவகாசம் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.

Read More