Home> Movies
Advertisement

வெற்றியை கொண்டாடுவோம் - ராகவா லாரன்ஸ்

வெற்றியை கொண்டாடுவோம் - ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது. நாம் வெற்றியை கொண்டாடுவோம் என்றும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

மெரினாவில் போலீசார் தடியடி நடத்தியுள்ள சூழலில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அதில் ராகவா லாரன்ஸ் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது. ஆளுநரும் இதை தனது உரையில் உறுதி செய்துவிட்டார். ஆனால் நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்பது யாருக்குமே புரியவில்லை. நமக்கு நிரந்தர வெற்றி கிடைத்த இந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் போராட வேண்டாம். எந்த இடத்தில் 7 நாட்களாக கஷ்டப்பட்டோமோ அதே மெரினாவில் இன்று இரவு நாம் வெற்றியை கொண்டாடுவோம். நானே நேரில் வந்து விளக்கம் அளிக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Read More