Home> Movies
Advertisement

நானும் ரவுடி தான் படத்தில் நடிக்க வேண்டியது நான்தான்! ரகசியம் உடைத்த நடிகர்!

விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பு வெளியான படத்தின் வாய்ப்பு முதலில் எனக்குதான் வந்தது என்று நடிகர் அசோக் செல்வன் கூறியுள்ளார்.

நானும் ரவுடி தான் படத்தில் நடிக்க வேண்டியது நான்தான்! ரகசியம் உடைத்த நடிகர்!

விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பு வெளியான படத்தின் வாய்ப்பு முதலில் எனக்குதான் வந்தது என்று நடிகர் அசோக் செல்வன் கூறியுள்ளார்.  2015-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை படம் 'நானும் ரவுடி தான்'.  விக்னேஷ் ஷிவன் எழுதி இயக்கி, நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸின் கீழ் தயாரித்து, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் விநியோகம் செய்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்.ஜே.பாலாஜி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

ALSO READ | கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட களமிறங்கும் படங்கள்!

இந்தப் படத்தை இயக்க 2013-ல் திட்டம் தீட்டிய விக்னேஷ் சிவன், முதலில் அனிருத்தை நடிக்க வைக்க நினைத்தார். ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இப்படத்தில் இருந்து அனிருத் விலகினார். இந்த படம் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவிற்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.  இப்படத்தில் வரும் 'ஆர் யூ ஓகே பேபி' 'காது மா' போன்ற வசனங்கள் ரசிகர்களிடம் பரவலாக ஒலித்தது. பழிவாங்குவதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக காட்டிய படம் தான் இது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்தில் இருந்துதான் நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவன் இருக்கும் காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் 'ஓ மை கடவுளே' பட புகழ் நடிகர் அசோக் செல்வன் 'நானும் ரவுடி தான்'  படம் குறித்த முக்கிய தகவல் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.  அதாவது இந்தப்படத்தின் ஆஃபர் முதலில் அசோக் செல்வனுக்கு தான் வந்துள்ளது.  அந்த ஆஃபரை இவருக்கு அளித்ததே விஜய்சேதுபதி தானாம்.  ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அசோக் செல்வனால் இப்படத்தில் நடிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.  அதனையடுத்து இந்த வாய்ப்பை அவர் நழுவ விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

fallbacks

இதேபோல் பல நடிகர்களும் சில படங்களின் வெற்றி வாய்ப்பினை தவறவிட்டுள்ளனர்.  அந்த வகையில் ஆர்யா நடிப்பில் வெளியான 'நான் கடவுள்' படத்தில் நடிகர் அஜித் ஏற்கனவே நடிக்க இருந்ததாகவும், பின்னர் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.  அதே போல விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி நடைப்போட்ட 'நண்பன்' படத்தின் வாய்ப்பு ஆரம்பத்தில் சூர்யாவிற்கு கிடைத்து அதனை நழுவ விட்டுள்ளார்.  மேலும் ஜீவா நடிப்பில் வித்தியாசமான கதை களத்தில் வெளியாகி வெற்றி நடைப்போட்ட 'கோ' படம் சிம்புவிடம் இருந்து நழுவி சென்றது.  அதேப்போல 'எந்திரன்' படமும் கமல்ஹாசன் இடமிருந்து நழுவிச் சென்று ரஜினிகாந்திடம் சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | நயன்தாராவின் அடுத்த அவதாரம்: அழகு சாதன விற்பனையில் அடி எடுத்து வைத்தார் அழகி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More