Home> Movies
Advertisement

மீண்டும் 'கேப்டன் மில்லர்' இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் தனுஷ்

இயக்குனர் அருண் மாதேஷ், மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மீண்டும் 'கேப்டன் மில்லர்' இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் புதிய படத்தின் முக்கிய அப்டேட் இதோ: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் மூலம் ரசிகர்களை குஷி படுத்தி உள்ளார். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்தப் படமும் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி மிரட்டியது. இந்தப் படத்தின்மீதான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.

இதன் பிறகு நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார். இதற்கு தற்காலிகமாக 'D 50' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க உருவாகிவரும் இந்தப் படத்திற்காக, தன்னுடைய முடியை ஷார்ட்டாக்கி உள்ளார் தனுஷ். சமீபத்தில் திருப்பதியில் இவர் மொடையடித்த நிலையில், தன்னுடைய தலைமுடி குறிப்பிட்ட அளவு வளர்வதற்காக காத்திருந்தார். அந்த நேரத்தில் மற்ற நடிகர்களின் போர்ஷன்களை எடுத்து முடித்தார் தனுஷ் (Dhanush).

மேலும் படிக்க | சூப்பர்ஸ்டார் என்றாலே ரஜினி தான்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ்

இதை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் (Dhanush-Sekhar Kammula’s film) இணைதுள்ளார். தலைப்பிடப்படாத இப்படம் ‘டி51’ என அழைக்கப்படுகிறது. மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 28 அன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாது. சமீபத்தில் இந்தப் படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இத்தனை படங்களை தனது லிஸ்டில் வைத்துள்ள நடிகர் தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான wunder bar தயாரிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் ஒருமுறை நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

அதேபோல மாரி செல்வராஜ் இயக்கத்திலும் அவர் ஒரு திரைப்படத்தை Wunder Bar தயாரிப்பில் ஹச். வினோத், நெல்சன் திலிப் குமார், வெற்றிமாறன் உள்ளிட்ட பல இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த ரஜினி... வீடியோவுக்கு ரசிகர்களின் ரியாக்சன் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More