Home> Movies
Advertisement

நரகாசூரன் இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்து படம் பற்றி அறிவிப்பு!!

இயக்குனர் கார்த்திக் நரேன் தனது மூன்றாவது படத்தை பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

நரகாசூரன் இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்து படம் பற்றி அறிவிப்பு!!

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நரகாசூரன்’. இதில் ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை ரான் யோஹான் அமைத்துள்ளார்.

இந்த படத்தை ஷர்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பு நிறுவனமான ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் தனது மூன்றாவது படத்தை பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது துருவங்கள் பதினாறு, நரகாசூரன் படத்தை அடுத்து புதிய படமொன்றை இயக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கார்த்திக் நரேனே தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். 

 

 

Read More