Home> Movies
Advertisement

நல்ல விஷயங்களுக்கு தடைகள் வரத்தான் செய்யும் - நடிகர் சாந்தனு!

கடந்த வாரம் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  கிட்டத்தட்ட இரண்டாவது வாரத்திலும் 200 திரையரங்குகளில் ஓடுகிறது.  

நல்ல விஷயங்களுக்கு தடைகள் வரத்தான் செய்யும் - நடிகர் சாந்தனு!

ப்ளூ ஸ்டார் படத்தை இரண்டாவது வாரமாக மக்கள் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், தற்போதும் 200 திரையரங்குகளுக்கு மேல் படம் ஓடுவது பெருமையாக உள்ளது என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார். ப்ளூ ஸ்டார் திரைப்பட குழுவினர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் “ப்ளூ ஸ்டார்” படம் பார்க்க வந்த ரசிகர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசோக் செல்வன் கூறும் போது, இரண்டாவது வாரமாக ப்ளூ ஸ்டார் படத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் 200 திரையரங்குக்கு மேல் படம் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 

மேலும் படிக்க | Squid Game 2: விரைவில் வருகிறது ஸ்குவிட் கேம் சீசன் 2! வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்!

அதே போல் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமல்லாமல் மற்ற திரையரங்குகளிலும் ப்ளூ ஸ்டார் படம் ஓடுவது எங்கள் அனைவருக்கும் பெருமையாக உள்ளது. குறிப்பாக எனது படம் வெளியாகும் போது நிச்சயமாக கோவையில் உள்ள திரையரங்கில் வந்து படம் பார்ப்பேன், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் ப்ளூ ஸ்டார் படத்திற்கும் கோவை மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். ப்ளூ ஸ்டார் திரையரங்கிற்காக உருவாக்கப்பட்ட படம். கொரோனாவிற்கு பிறகு திரையரங்கிற்கு வரும் மக்களின் கூட்டம் குறைந்துள்ளதாக நினைத்த நிலையில், தற்போது மீண்டும் மக்கள் திரையரங்கிற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், எனது மற்ற படங்களில் இல்லாத புதிய ரசிகர்க ளை பெற்றுள்ளேன். மக்களோடு இணைந்துள்ளேன். திரைப்படத்தை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர் என தெரிவித்தார். நடிகர் சாந்தனு கூறும் போது, ப்ளூ ஸ்டார் படத்திற்கு கோவை மக்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர். மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் அனைவருக்கும் அனைத்தும் சமம் என்பதை வலியுறுத்தும். படம் இயக்குனர் பா ரஞ்சித் கூறியது போல நல்ல விஷயங்களுக்கு தடைகள் வரத்தான் செய்யும் அதனைத் தாண்டி நாம் செய்ய வேண்டும். மேலும் இந்த படம் அனைத்தும் சமம் என்பதை தலையில் தட்டி சொல்லக்கூடிய விஷயங்கள் உள்ளது. அதற்கு மக்கள் பெரிய ஆதரவு தந்துள்ளனர் என தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித், இந்த படத்திற்கு முதலில் சென்சார் போர்ட் சர்டிபிகேட் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தார். நீலம் ப்ரொடக்ஷனில் தயாராகும் படம் என்றாலே சென்சார் போர்ட் ஒருவித மைண்ட் செட்டிற்கு வந்து விடுகின்றனர். அதேபோலத்தான் இந்த படத்திற்கு முதலில் அவர்கள் சென்சார் தரவில்லை. ஏனென்று கேட்டால் சாதிய ரீதியான கருத்துக்கள் நிறைய இடம்பெற்றுள்ளதாகவும், மேலும் படத்தில் நிறைய மாற்றங்களை செய்ய சொன்னார்கள். இதை செய்தால் தான் சென்சார் என்றும் கூறினர். அதன் பிறகு ரிவைஸிங் கமிட்டிக்கு சென்றோம், அங்கும் சில மாற்றங்களை செய்ய சொன்னார்கள்.

பிறகு அதை செய்தோம், அதனால் தான் படம் தற்போது வெளியாகியுள்ளது. சென்சார் போர்டில் இருக்கும் இந்த பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் . அப்போதுதான் மக்களுக்கான படம் வெளியாகும். இன்னும் எத்தனை நாட்கள் தான் இதையே பேசுவீர்கள் என்று கேட்கிறார்கள். மக்களிடம் சென்று சேரும் வரை பேசுவோம். ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி இங்கு நிறைய பேருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது, அது தான் எங்களுக்கு தேவை என்று ரஞ்சித் பேசி இருந்தார்.  

மேலும் படிக்க | முரசொலி நில வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More