Home> Movies
Advertisement

Bigg Boss 6 : கடைசி கட்டம் வரை வந்த ரச்சிதாவுக்கு எவ்வளவு செட்டில்மெண்ட்?

Bigg Boss Tamil Season 6 : இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ள ரச்சிதாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட செட்டில்மெண்ட் குறித்த தகவல்களும் தற்போது கசிந்துள்ளது.

Bigg Boss 6 : கடைசி கட்டம் வரை வந்த ரச்சிதாவுக்கு எவ்வளவு செட்டில்மெண்ட்?

Bigg Boss Tamil Season 6 : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்கான நிகழ்ச்சி மட்டுமின்றி மனிதர்கள் பலதரப்பட்ட பரிமாணங்களை பொதுவெளியில் காண்பதற்கும், அதனை புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசித்து பார்க்கிறார்கள். 2017ஆம் ஆண்டு இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கிய நிலையில், இப்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. முதல் ஐந்து சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன்தான் இதிலும் தொகுத்து வழங்கி வருகிறார்.  

மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தொடர்ந்து, பலரும் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இந்த வாரமும் ஒரு முக்கிய போட்டியாளராக கருதப்படுபவர் வெளியேறியதாக முன்னர் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் படிக்க | இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர்தான்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அதாவது, விஜய் தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமடைந்த ரச்சிதா மகாலக்ஷ்மிதான் இந்த வாரம் எவிக்ட் ஆக உள்ளதாக வெளிவந்த தகவலை அடுத்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். முதல் மூன்று போட்டியாளர்களுள் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் 90ஆவது நாளில் வெளியேறுவது துரதிருஷ்டவசமானதுதான் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஒப்பாரி வைத்து வருகின்றனர். 

இதுவரை இந்த வீட்டிலிருந்து ஜி.பி.முத்து, சாந்தி மாஸ்டர், அசால் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம், அயீஷா, ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ஷிவின் ஆகிய போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.  அமுதவாணன் அல்லது அசீம் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, அமுத வாணன் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ள ரச்சிதாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட செட்டில்மெண்ட் குறித்த தகவல்களும் தற்போது கசிந்துள்ளது. அதாவது, இதுவரை சுமார் 90 நாள்கள் இருந்த ரச்சிதாவுக்கு தினமும் ரூ. 28 ஆயிரம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | குக் வித் கோமாளியில் ஜிபி முத்து! சமையல் எப்படி இருக்கப்போகுதோ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More