Home> Movies
Advertisement

Poornima Ravi:16 லட்சத்துடன் வெளியேறிய பூர்ணிமா..பிக்பாஸில் மொத்தமாக சம்பாதித்தது எவ்வளவு?

Bigg Boss Poornima Ravi : பிக்பாஸ் 7 போட்டியில் பணப்பெட்டி டாஸ்க் வந்ததை ஒட்டி, அதை எடுத்துக்கொண்டு பூர்ணிமா ரவி வெளியேறியுள்ளார். 

Poornima Ravi:16 லட்சத்துடன் வெளியேறிய பூர்ணிமா..பிக்பாஸில் மொத்தமாக சம்பாதித்தது எவ்வளவு?

Bigg Boss Season 7 Tamil, Poornima Ravi Per Day Salary Detail :டிவி ரசிகர்களிடையே தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ள நிகழ்ச்சி, ‘பிக்பாஸ் சீசன் 7’. கடந்த அக்டோபர் மாதம் தாெடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த வாரம் பணப்பெட்டி வந்தததை அடுத்து அதை எடுத்துக்கொண்டு பூர்ணிமா ரவி வெளியேறியுள்ளார். 

பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா..

பிக்பாஸ் போட்டியில் டிஜிட்டல் உலகில் அதிகம் பிரபலமானவர்களையும் போட்டியாளர்களாக களமிறக்குவர். அந்த வகையில், ‘ஆரத்தி’ என்ற பெயரில் பிரபலமான பூர்ணிமா ரவியும் இப்போட்டியில் இரண்டாவது போட்டியாளராக களமிறங்கினார். இவரும், சக போட்டியாளரான மாயாவும் நெருங்கிய தோழிகளாக இந்நிகழ்ச்சியில் வலம் வந்தனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் மத்தியில் பயங்கர டஃப் கொடுத்த போட்டியாளராக பார்க்கப்பட்டவர் பூர்ணிமா ரவி. இந்த போட்டியில் கிட்டத்தட்ட 96 நாட்கள் தாக்குப்பிடித்த இவர், இறுதிப்போட்டி வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டதை அடுத்து, அதன் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டும் இறங்கி கொண்டும் இருந்தது. நேற்று, இந்த பணப்பெட்டியில் 16 லட்சம் என தொகை ஏற்றப்பட்டது. இந்து, பரிசுத்தொகை என்பதால் இதிலிருந்து 30 சதவிகிதம் வரிக்காக பிடிக்கப்படும். ஆக மொத்தத்தில் பூர்ணிமாவிற்கு 16 லட்சத்தில் சுமார் 13  லட்சம் கையிருப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | அப்பப்பா..தலை சுற்ற வைக்கும் தனுஷின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?

பூர்ணிமா சம்பாதித்த மொத்த தொகை..

பிக்பாஸில் போட்டியாளர்களாக உள்ள அனைவருக்குமே, ‘ஒரு நாளைக்கு இவ்வளவு’ என்ற வகையில் குறிப்பிட்ட தொகை ஒன்று வழங்கப்படும். அப்படி, பூர்ணிமாவிற்கும் ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர், மொத்தமாக 96 நாட்கள் இருந்துள்ளார். இவர், தனக்கு சம்பளமாக வழங்கப்பட்ட தொகை மூலமாக மட்டும், 14 லட்சம் வரை சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதிலும், வரிப்பிடித்தம் போக குறிப்பிட்ட தொகை கைக்கு கிடைக்கும். 

யார் இந்த பூர்ணிமா ரவி? 

தமிழ்நாட்டில் ‘டப்ஸ் மேஷ்’ என்ற ஆப் அறிமுகமான போது, அதில் பட டைலாக்குகளுக்கு வாயசைக்க ஆரம்பித்து வீடியோக்களை பதிவிட்டவர் பூர்ணிமா ரவி. அதன் பிறகு, டப்ஸ் மேஷ் ஆப் மியூசிக்கலி, டிக்டாக் என்ற பெயரில் மெருகேறியது. அவை அனைத்திலும் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். இதன் மூலம், இவருக்கு ஒரு பிரபல யூடியூப் சேனலில் வீடியோக்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படி, பலரிடையே ஆரத்தி என்ற பெயரில் இவர் பிரபலமானார். அதுதான், தற்போது இவரை பிக்பாஸ் வரை கொண்டு சென்றிருக்கிறது. 

பிக்பாஸின் பூகம்பம் டாஸ்கின் போது, பூர்ணிமா சென்னையில் வந்து தங்கியிருந்த காலங்களில் தான் சிரமப்பட்ட தருணங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டார். தொடக்கத்தில் ஒரு வீடு கூட இல்லாமல் சிரமப்பட்ட அவர், தற்போது சென்னையில் சொந்தமாக ஒரு வீடு, கார் என இருப்பதாக பெருமையுடன் கூறினார். இவர்,16 லட்சத்துடன் வெளியேறியது நல்ல முடிவு என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இறுதிப்போட்டிக்குள் நுழைய இருப்பது யார்? 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளது. ஃபைனல்ஸிற்கு முன்னர் இன்னும் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட உள்ளனர். மேடையில், இரண்டு அல்லது மூன்று பேர் கமலுடன் நிற்பர். அப்படி நிற்கும் மூன்று பேர்களில் அர்ச்சனா, மாயா கண்டிப்பாக இருப்பர் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | “செருப்பு பிஞ்சிறும்..” கேப்டன் மில்லர் பட விழாவில் இளைஞரை தாக்கிய பிரபலம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More