Home> Movies
Advertisement

13 வயது சிறுமியை கற்பழித்த பிரபல பாடகர்..போட்டோ பதிவிட்டதால் போலீசில் சிக்கினார்!

Bhojpuri Singer: போஜ்பூரி பாடகர் ஒருவர் 13 வயது சிறுமியை கற்பழித்த காரணத்திற்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

13 வயது சிறுமியை கற்பழித்த பிரபல பாடகர்..போட்டோ பதிவிட்டதால் போலீசில் சிக்கினார்!

பீகாரை சேர்ந்த போஜ்பூரி பாடகர் ஒருவர், 13 வயது சிறுமியை கற்பழித்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரபல பாடகர்: 

அபிஷேக், என்ற போஜ்புரி பாடகர் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளனர். 13 வயது சிறுமி ஒருவரை இந்த பாடகர் கற்பழித்ததாக கூறி இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிறுமி கற்பழிப்பு:

பாடகர் அபிஷேக்கை பாபுல் பிகாரி எனவும் அழைக்கப்படுகிறார். இவர், அரியானாவை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை கற்பழித்து விட்டதாக கூறி இவர் மீது அந்த சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில், அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று அந்த சிறுமியின் அனுமதியின்றி அவரை பல்வேறு விதமாக இந்த இளைஞர் போட்டோ எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | சினிமாவில் இருந்து விலகிய ஸ்பைடர் மேன் நாயகன்? டாம் ஹாலாண்டின் பரபரப்பு அறிவிப்பு..!

இளைஞர் கைது:

குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இளைஞர், தான் எடுத்த அந்த சிறுமியின் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அச்சிறுமியின் பெற்றோர் அந்த இளைஞர் மீது புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, போஜ்பூரி பாடகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு செய்யப்பட்டு போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர். 

இன்ஸ்டாகிராம் கண்காணிக்கிறதா? 

சில நாட்களுக்கு முன்னர், 13 வயதுக்கு கீழுள்ள பயனாளர்களை “இந்த வலைதளத்தை உபயோகிக்க தகுந்த வயதில்லை” என கூறி அவர்களது கணக்கை நீக்கியது இன்ஸ்டாகிராம். சிறார்கள் அதிகமாக பயன்படுத்தி வந்த இந்த தளத்தில், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுவதாக எழுந்த புகாரையடுத்து இந்த நடவடிக்கையை இன்ஸ்டாவின் தாய் நிறுவனமான மெட்டா மேற்கொண்டது. இப்போது பாலியல் புகாரில் சிக்கியுள்ள போஜ்புரி இளைஞரும் இன்ஸ்டாவின் கண்காணிப்பினால்தான் சிக்கினார் என கூறப்படுகிறது.  கடந்த 2020ஆம் ஆண்டில், பாய்ஸ் லாக்கர்ஸ் ரூம் என்ற பெயரில் குழு ஆரம்பிக்கப்பட்டு அதில் சிறார்களின் புகைப்படங்கள் பதிவிடப்பட்டதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி, பாலியல் வன்புணர்வை தூண்டும் செயலில் ஈடுபடுவோர் ஒவ்வொருவராக பிடிபடுவதால், இன்ஸ்டாகிராம் அனைவரையும் கண்காணிக்கிறதோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | ப்ரேக் எடுப்பதாக கூறி பலரையும் ஏமாற்றிய பிரபல நடிகை..செம கடுப்பில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More