Home> Movies
Advertisement

பாகுபலி-2: இந்திய சினிமாவுக்கு பெருமை ரஜினிகாந்த் புகழாரம்

பாகுபலி-2: இந்திய சினிமாவுக்கு பெருமை ரஜினிகாந்த் புகழாரம்

எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.

இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி 2 நிகழ்த்தி உள்ளது.

இந்நிலையில் 'பாகுபலி-2' படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:-

 

 

'பாகுபலி-2' இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. 'பாகுபலி-2' படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரைப்பட குழுவினருக்கும் பாராட்டுகள். 

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Read More