Home> Movies
Advertisement

அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த ஊர் மக்கள்.. பொய் சொல்லி சிக்கிய ஷண்முகம்

Zee Tamil Anna Serial Today's Episode Update: சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த ஊர் மக்கள்.. பொய் சொல்லி சிக்கிய ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த ஊர் மக்கள்.. பொய் சொல்லி சிக்கிய ஷண்முகம்

Zee Tamil Anna Serial Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி பானிபூரி கேட்க வெட்டுகிளினியின் ஐடியாவை கேட்டு ஷண்முகம் சோலா பூரியையும் பாணியையும் தனித்தனியாக வாங்கி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல் அண்ணா தொடரின் (Anna Serial) இன்றைய எபிசோடில், அதாவது, ஷண்முகம் அந்த பூரியையும் ரசத்தையும் ஒரு தட்டில் வைத்து மூடி எடுத்து வந்த உனக்காக ஸ்பெஷலாக வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லி கொடுக்க அதை திறந்து பார்த்த பரணி இது தான் உங்கள் ஊர்ல பானிபூரியா என்று முகத்தில் தூக்கி வீசுகிறாள். ஷண்முகம் திட்டு வாங்கியதும் ஐடியா கொடுத்த வெட்டுக்கிளி அங்கிருந்து எஸ்கேப் ஆகிறான். 

இதனையடுத்து ஊர் பெரியவர்கள் சௌந்தரபாண்டியை சந்தித்து இந்த முறை தர்மகத்தா தேர்தலில் நீங்க அன்னபோஸ்ட்டாக ஜெயிக்க முடியாது, உங்களை எதிர்த்து ஷண்முகம் நிற்க போறாரு, அதனால் தேர்தல் நடக்கும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்லி விட்டு செல்கிறார்கள். இதனால் சௌந்தரபாண்டி பயங்கர அதிர்ச்சி அடைகிறார். 

அடுத்து ஷண்முகம் பரணிக்காக தேடி பிடித்து ஒரு பானிபூரி காரனை வண்டியோடு வீட்டிற்கு அழைத்து வந்து எல்லாரையும் வெளியே கூப்பிட தங்கைகளும் வைகுண்டமும் மட்டும் வருகிறார்கள். உங்களுக்காக தான் பானிபூரி வண்டியை கூப்பிட்டு வந்தேன் என்று சொல்ல இவர்கள் எல்லாரும் பனிபூரியை ரசித்து ரசித்து சாப்பிட ஷண்முகம் என்னப்பா நீ மட்டும் சாப்பிட்டுட்டு இருக்க என்று கேட்க வைகுண்டம் அதுக்கு தான டா கூட்டிட்டு வந்த என்று திருப்பி கேட்க பரணியையும் கூப்பிடு என்று சொல்ல வைகுண்டம் ஆமாம் மருமகளை மறந்திட்டோமே நீயே கூப்பிடு என்று சொல்ல ஷண்முகம் பரணியை கூப்பிட அவளும் வெளியே வருகிறாள். 

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருகிறது.. அதுவும் மொக்கையான இந்த காரணத்திற்காகவா?

வெளியே வந்த பரணியிடம் தங்கைகள் அண்ணன் எங்களுக்காக தான் பானிபூரி வண்டியை கூட்டிட்டு வந்திருக்கு வாங்க நீங்களும் சாப்பிடுங்க என்று சொல்ல பரணி எனக்கு வேண்டாம், எனக்கு பானிபூரி பிடிக்காது என்று சொல்ல ஷண்முகம் என்ன நீ பிடிக்காதுன்னு சொல்ற, காலையில் நீ தானே கேட்ட என்று உண்மையை உளற தங்கைகள் அப்போ எங்களுக்குனு சொன்னது பொய்யா என்று கோபப்படுகின்றனர். 

பிறகு எல்லாரும் ஒன்று சேர்ந்து பானிபூரியை  சாப்பிட மறுபக்கம் சௌந்தரபாண்டி ஒற்றை காலில் பூஜை செய்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல்: சௌந்தரபாண்டியை சுற்றி வளைத்த பரணி, ஷண்முகம்.. பாண்டியம்மாவால் வந்த ஷாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More