Home> Movies
Advertisement

அண்ணா சீரியல் அப்டேட்: சண்முகத்தை ஜெயிலுக்குள் தள்ள சௌந்தரபாண்டி போட்ட திட்டம்.. நடக்க போவது என்ன?

Anna Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

அண்ணா சீரியல் அப்டேட்:  சண்முகத்தை ஜெயிலுக்குள் தள்ள சௌந்தரபாண்டி போட்ட திட்டம்.. நடக்க போவது என்ன?

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.

அண்ணா: சனி, ஞாயிறு எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சண்முகத்தை தோற்கடிக்க வேண்டும் என்று ஒற்றை காலில் பூஜை செய்ய தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, சௌந்தரபாண்டி பூஜை செய்வதை பார்த்து இசக்கி, பாக்கியம் ஆகியோர் கலாய்க்க தொடங்குகின்றனர். சிவபாலன் உன்னால் மாமாவை ஒன்னும் செய்ய முடியாது என்று சொல்ல சௌந்தரபாண்டி கோபப்பட்டு அவனை அடிக்க துரத்த இசக்கி மாமா காலை கீழே ஊனிட்டீங்க என்று கலாய்க்கிறாள். 

fallbacks

தூங்கும் ஷண்முகத்திடம் தன் காதலை சொல்லும் பரணி

அப்படியே மறுபக்கம் ஷண்முகம் தூங்கி கொண்டிருக்க பரணி அவன் பக்கத்தில் உட்கார்ந்து தனது மனதில் இருக்கும் காதலை பேச ஷண்முகம் தூங்குவது போல் நடித்து பேசுவது அனைத்தையும் கேட்கிறான். அடுத்த நாள் காலையில் சௌந்தரபாண்டி சண்முகத்தை தேர்தலில் நிற்க விடாமல் செய்ய என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கிறான். 

இந்த சமயத்தில் சனியனின் மனைவி போன் செய்து தண்ணீர் வரல என்று சொல்ல சௌந்தரபாண்டி தண்ணீர் டேக்கை மூடி அதில் விஷத்தை கலந்து ஷண்முகம் கையால் திறக்க வைத்து அவன் மீது விஷம் கலந்ததாக பழியை போட்டு ஜெயிலுக்குள் தள்ளி தேர்தலில் நிற்க விடாமல் செய்யலாம் என்று திட்டம் தீட்டுகிறார். 

மேலும் படிக்க | அஜித்குமாருடன் நடிக்கும் பிரேமலு நாயகன்! எந்த படத்தில், என்ன கேரக்டர் தெரியுமா?

ஷண்முகத்தை தடுக்கும் பரணி

அடுத்து செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்து முடித்த பிறகு சனியனின் மனைவி ஷண்முகத்திற்கு போன் செய்து தண்ணீர் வரல, வீராச்சாமி போனை எடுக்கல. நீங்க தான் எதாவது பண்ணனும் என்று சொன்னதும் ஷண்முகம் தண்ணீர் திறந்து விட கிளம்ப பரணி வேண்டாம் எனக்கு ஏதோ தப்பா தோணுது என்று சொல்கிறாள். ஷண்முகம் அதெல்லாம் ஒன்னும் இல்ல புள்ள என்று சொல்லி தண்ணீர் திறக்க கிளம்பி செல்கிறான். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Garudan Review: சூரியின் கருடன் படம் எப்படியிருக்கு? இதோ முதல் விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More