Home> Movies
Advertisement

நானும் அத்தகைய கொடுமைகளை எதிர்கொண்டேன்: நடிகை கௌரி கிஷன்

நடிகை கௌரி கிஷன் அடையாறு பள்ளியில் தான் படித்தபோது எதிர்கொண்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

நானும் அத்தகைய கொடுமைகளை எதிர்கொண்டேன்: நடிகை கௌரி கிஷன்

சென்னையின் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய விவகாரம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பலரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பி.எஸ்.பி.பி (PSBB) ஆசிரியர் ராஜகோபாலன் மீதான புகார் தொடர்பாக, அப்பள்ளியின் முதல்வரிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடந்து வருகிறது.

பி.எஸ்.பி.பி (PSBB) ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்புகளில் தகாத முறையில் (Sexual Harassment Cases) நடந்துகொள்வதாக ஏற்கனவே மாணவர்கள் தரப்பில் பல புகார்கள் அளிக்கப்பட்டதாகவும், பள்ளி நிர்வாகம் அவற்றை தீவிரமாக எடுத்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ | PSBB பள்ளி முதல்வரிடம் மீண்டும் விசாரணை: நடவடிக்கை எடுக்காதது குறித்து காவல்துறை கேள்வி 
 
இதற்கிடையில் தற்போது 96, மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை கௌரி கிஷன் இது போன்ற சம்பவம் தான் அடையாறு பள்ளியில் படித்தபோது எதிர்கொண்டை ஒரு பதிவாக வெளியிட்டுள்ளார். அதில்., தான் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ மற்றும் மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை மாணவ-மாணவியர் மீது சுமத்துவது போன்ற கொடுமைகளை தான் மட்டுமல்லாது தன்னுடன் படித்த அனைவரும் எதிர்கொண்டதாக அவர் கூறியுள்ளார். 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More