Home> Movies
Advertisement

நடிகை அதுல்யா வீட்டில் நடந்த சம்பவம்.. சிசிடிவி மூலம் மாட்டிக் கொண்ட பணிப்பெண்

கோவையில் இருக்கும் நடிகை அதுல்யா ரவியின் வீட்டில் பணம், பாஸ்போர்ட் உள்ளிட்ட பொருட்கள் திருடியதாக அவரது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நடிகை அதுல்யா வீட்டில் நடந்த சம்பவம்.. சிசிடிவி மூலம் மாட்டிக் கொண்ட பணிப்பெண்

கோவையில் இருக்கும் நடிகை அதுல்யா ரவியின் வீட்டில் பணம், பாஸ்போர்ட் உள்ளிட்ட பொருட்கள் திருடியதாக அவரது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

அதுல்யா ரவி:
கோயம்புத்தூரில் தமிழ் இந்து குடும்பத்தில் பிறந்து தற்போது முக்கிய நடிக்கையாக கலக்கி வரும் நடிகை அதுல்யா ரவி (Athulya Ravi) கடந்த 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தை இயக்குனர் சிவராஜ் இயக்க இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகர் ஜிகே நடித்திருந்தார். அதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ஏமாலி. இதை தொடர்ந்து அதே ஆண்டில் இவர் நடிகர் ஆரி நடித்த நாகேஷ் திரையரங்கம் என்ற திகில்த் திரைப்படத்தில் ஆரியின் சகோதரியாக துணைக் கதாபாத்திரம் ஏற்று நடித்து இருந்தார்.

மேலும் படிக்க | வானை தொடும் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல்! இதுவரை எவ்வளவு தெரியுமா?

2019ஆம் ஆண்டு சுட்டு பிடிக்க உத்தரவு என்ற அதிரடித் திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த்க்கு ஜோடியாக புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதை அடுத்து சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் 2 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அடுத்த சட்டை, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்திலும் அவரது கவர்ச்சி ஆட்டம் தொடர்ந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவில் இந்தப் படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதுல்யா வீட்டில் திருட்டு
இந்நிலையில் தற்போது அதிகமான பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அடுத்தடுத்து ஃபோட்டோ ஷூட்களை எடுத்து அவற்றை வெளியிட்டு வருகிறார்.

 

இதனிடையே கோவையில் அதுல்யா ரவி தங்கியுள்ள வீட்டில் திருட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரது வீட்டில் செல்வி என்கிற பணிப்பெண் பீரோவில் இருந்த நகைகள், பணங்கள் திருடி வந்துள்ளார். எனினும் சில தினங்களுக்கு முன்பு அதுல்யா ரவியின் பாஸ்போர்ட் மற்றும் சிறிது பணம் திருட்டு போயியுள்ளது. இதையடுத்தே இந்த திருட்டு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் அதுல்யா புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து இந்த பணிப்பெண் பணம் மற்றும் நகைகளை அதிகமாக எடுத்தால் சிறிது சிறிதாக எடுத்ததாகவும் தெரியாமல் பாஸ்போர்ட்டை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அதுல்யா ரவியின் வீட்டில் இருந்த பீரோவில் பணிப்பெண் திருடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் பீரோவை திறந்து பாஸ்போர்ட்டை பணம் மற்றும் பாஸ்போர்ட்டை எடுத்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து அவரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி! யாரால் தெரியுமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More