Home> Lifestyle
Advertisement

7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் பரிசு; 3% DA உயர்வு

7th Pay Commission Update: அரசு (Odisha State Government) ஊழியர்களின் DA மற்றும் DR ஐ உயர்த்தியுள்ளது.

7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் பரிசு; 3% DA உயர்வு

புதுடெல்லி: 7th Pay Commission Update: கடந்த ஆண்டின் கடைசி மாதங்களில், ஊழியர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக நல்ல செய்திகள் கிடைத்துள்ளன. மத்திய அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி, மாநில அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி, அனைவரின் சம்பளத்திலும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த வரிசையில், ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி (7th Pay Commission Latest News) உள்ளது. அரசு ஊழியர்களின் DA மற்றும் DR ஐ மீண்டும் 3% உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வரும். இந்த அறிவிப்புக்கு பிறகு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி அலை ஏற்பட்டுள்ளது. அதன் விவரங்களை அறியலாம்.

DA மற்றும் DR இல் 3% உயர்வு
உண்மையில், மத்திய அரசு ஏற்கனவே தனது ஊழியர்களின் டிஏவை 31% (DA Hike) ஆக உயர்த்தியுள்ளது. இந்த வரிசையில், ஒடிசா மாநில அரசும் ஊழியர்களின் டிஏ மற்றும் டிஆர் உயர்த்தியுள்ளது. தற்போது ஒடிசா ஊழியர்களும் மத்திய ஊழியர்களைப் போலவே 31% DA மற்றும் DR நன்மைகளைப் பெறுவார்கள்.

ALSO READ | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் அதிரடி உயர்வு 

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி அறிவித்தார். இந்த முடிவால் மாநிலத்தில் உள்ள சுமார் 7.5 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

30 சதவீதம் மீது முத்திரை
7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) கீழ் ஊழியர்களுக்கு 30 சதவீத நிலுவைத் தொகையை வழங்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2016 மற்றும் ஆகஸ்ட் 2017 க்கு இடையில் உயர்த்தப்பட்ட ஊதியத்தில் 50 சதவீத நிலுவைத் தொகையை ஊழியர்கள் பெறுவார்கள். இந்த முடிவால் மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். 

மாநில அரசு உயர்த்திய பிறகு, தற்போது ஊழியர்களின் அகவிலைப்படியானது (Dearness allowance) அடிப்படை சம்பளத்தில் 31% ஆகிவிட்டது. இந்த அதிகரிப்பு ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வரும். 

மத்திய அரசும் அதிகரிக்கலாம்
மத்திய அரசு ஊழியர்களின் டிஏவை மீண்டும் ஒருமுறை உயர்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. AICPI குறியீட்டின் தரவுகளைப் பார்த்தால், செப்டம்பர் 2021 வரை, அகவிலைப்படி 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது இதன்படி அதில் 2 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இது மேலும் 1 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2021க்குள் CPI (IW) எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படியில் 3 சதவீதம் அதிகரிப்பு உறுதி. அதாவது மொத்த DA 3% முதல் 34% வரை அதிகரிக்கும். இது ஜனவரி 2022 முதல் வழங்கப்படும் மற்றும் மத்திய ஊழியர்களின் சம்பளம் உயரும்.

ALSO READ | 7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 1,44,200 வரை அரியர் தொகை கிடைக்கும், விவரம் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More