Home> Lifestyle
Advertisement

300 ஆண்டுக்கு முன் காலமான நபருடன் திருமணம் செய்த பெண்!

கடந்த 2016 வருடம் அயர்லாந்தில் உள்ள ஒரு பெண் பேயை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக பேட்டி அளித்துள்ளார்

300 ஆண்டுக்கு முன் காலமான நபருடன் திருமணம் செய்த பெண்!

கடந்த 2016 வருடம் அயர்லாந்தில் உள்ள ஒரு பெண் பேயை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக பேட்டி அளித்துள்ளார்

அயர்லாந்தில் இருக்கும் 'அமாண்டா டீக்' என்ற பெண் சிறுவயதில் இருந்து கடற்கொள்ளையர்களை பற்றி படித்தும், படம் பார்த்தும் வளர்ந்து வந்துள்ளார். 

கடந்த 2016-ம் ஆண்டு இவர் கரிபியன் கடல் கொள்ளையர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அந்த கடல் கொள்ளையர் 300 வருடத்திற்கு முன்பே மரணம் அடைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

கரிபியனை சேர்ந்த 'ஜாக் லார்ஜ்' பேயாக வந்து அவரிடம் காதல் சொல்லி உள்ளதாக அமாண்டா டீக் கூறினார். அதனால், அவருடைய காதலை ஏற்று அமாண்டா டீக் பேயை திருமணம் செய்துள்ளார். முதலில் நண்பர்களாக இருந்தோம் பின் காதலித்தோம் என்று கூறியுள்ளார் அமாண்டா டீக். 

தற்போது அயர்லாந்து அரசு இவர்களுடைய திருமணத்தை ஏற்றுக் கொள்ளவைல்லை. உலகில் வாழும் தம்பதிகளை விட நாங்கள் சந்தோஷமாக உள்ளோம் என்றும், எனக்கு அவர் பேய் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Read More