Home> Lifestyle
Advertisement

Money Tips: பர்ஸில் இவற்றை வைத்தால் பணம் விரைவில் காலியாவிடும்

தங்கள் பர்ஸ், வீட்டில் வைத்திருக்கும் பணப்பை அல்லது பெட்டியில் எப்போதும் பணம் நிறைந்திருக்க இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாராவது இருக்க முடியுமா. ஆனால் பலருக்கு மாத இறுதிக்குள் நிதி நிலைமை மோசமடைகிறது. 

Money Tips: பர்ஸில் இவற்றை வைத்தால் பணம் விரைவில் காலியாவிடும்

தங்கள் பர்ஸ், வீட்டில் வைத்திருக்கும் பணப்பை அல்லது பெட்டியில் எப்போதும் பணம் நிறைந்திருக்க இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாராவது இருக்க முடியுமா. ஆனால் பலருக்கு மாத இறுதிக்குள் நிதி நிலைமை மோசமடைகிறது. மேலும், சில சமயங்களில் கடன் வாங்க வேண்டிய நிலை கூட உண்டாகிறது. வாஸ்து சாஸ்திரத்தில். பர்ஸில் பணம் என்றென்றும் நிறைந்திருக்க எவற்றை எல்லாம் வைக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது

பணத் தட்டுப்பாட்டுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். வாஸ்து குறைபாடுகளும் அதில் ஒன்று. வாஸ்து சாஸ்திரத்தில் பணப்பை அல்லது பர்ஸில் வைக்கக் கூடாதவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சிலருக்கு கை நிறைய பணம் சம்பாதித்த பிறகும், பண நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். பெரும்பாலும் அவரது பர்ஸ் காலியாகவே இருக்கும். இதற்குப் பின்னால், அவரது பணப்பையில் அல்லது பர்ஸில் வைத்திருக்கும் சில எதிர்மறையான விஷயங்களும் காரணமாகின்றன.

சில குறிப்பிட்ட பொருட்களை பர்ஸில் வைக்க வேண்டாம். அவை, எதிர்மறையை கொண்டு வருகின்றன. அவற்றை பணப்பையில் வைத்திருப்பது பெரும் தீங்கு விளைவிக்கும். எனவே, தெரிந்தோ தெரியாமலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பர்ஸில் வைத்திருக்க வேண்டாம். வைத்திருந்தால், உடனடியாக அவற்றை அகற்றவும்.

மேலும் படிக்க | வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): சிம்மம் முதல் விருச்சிகம் வரை

கூர்மையான பொருட்கள்: 

கத்திகள், ஊசிகள், சாவிகள் போன்ற கூர்மையான அல்லது உலோகப் பொருட்களை பர்ஸில் எப்போதும் வைத்திருக்காதீர்கள். இப்படிச் செய்வதால் அன்னை லட்சுமி கோபமடைந்து, அந்த நபரின் வாழ்வில் படிப்படியாக வறுமையின் பிடியில் சிக்கத் தொடங்குகிறது.

பில்கள் அல்லது ரசீதுகள்: 

பில்கள் அல்லது ரசீதுகள் போன்றவற்றை பர்ஸ் அல்லது வாலட்டில் வைத்திருக்க வேண்டாம். அவற்றை வைத்திருப்பது அவசியம் என்றால், அவை தேவைப்படும் வரை மட்டுமே வைத்திருக்க வேண்டும். பலர் வீட்டின் அனைத்து பில்களையும் பர்ஸில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிகிறார்கள், அது தவறு. அவை ராகு வடிவம் பெற்று பண இழப்பு, தேவையற்ற செலவுகளை உண்டாக்கும்.

முன்னோர்களின் படங்கள்: 

முன்னோர்களின் படங்களை பர்ஸில் வைப்பதும் தவறு. முன்னோர்களை மதிக்க வேண்டும். ஆனால் அவர்களின் புகைப்படங்களை இப்படி பர்சில் வைத்திருப்பது தவறு. இது வழிவகுக்கிறது. உங்கள் வீட்டின் தென்மேற்கு திசையில் முன்னோர்களின் படங்களை வைப்பது நல்லது.

தெய்வங்களின் படம்: 

அதே போல், பர்ஸில் கடவுள் படத்தை வைத்திருப்பதும் தவறு. கடவுளின் புகைப்படத்தையும் பய பக்தியுடன் வீட்டில் வைக்க வேண்டும். இல்லையெனில் தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

கசங்கிய நிலையில் நோட்டுகள்:

இது தவிர, பர்ஸ் அல்லது பணப்பையில் ஒரு நோட்டை கசக்கி, ஒழுங்கற்ற முறையில் வைத்திருக்க வேண்டாம். இதை செய்வதால் அன்னை மகாலட்சுமி கோபமடைந்தார். எப்போதும் பணத்தை நன்றாக மடித்து, ஒழுங்காக வைத்திருங்கள்.

வாஸ்து சாஸ்திரத்தில், பணம் கையில் தங்குவதற்கும், பர்ஸ் காலியாகாமல் இருப்பதற்கும் ஆன சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன, இதை கடைபிடித்தால் உங்கள் பர்ஸ் காலியாகாமல் பணம் என்றைக்கும் பற்சின் நிறைந்திருக்கும். 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி; அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More