Home> Lifestyle
Advertisement

இந்த 5 ராசிக்காரர்களுக்கு காதலர் தினம் மிகவும் ஆரவாரமாக இருக்கும்

தீங்கு விளைவிக்கும் கிரகமான ராகு 14 பிப்ரவரி 2022 அன்று ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார் மற்றும் ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். 

இந்த 5 ராசிக்காரர்களுக்கு காதலர் தினம் மிகவும் ஆரவாரமாக இருக்கும்

காதல் என்ற வைரஸ் தாக்கினால் அது ஆளை விழுங்காமல் விடாது. சில காதல் ஜெயிக்கும் சில காதல் காவிய காதலாகி விடும். இன்று பிப்ரவரி 14, 2022 காதலர் தினத்தில், 3 ராசிகளில் 2-2 கிரகங்கள் உள்ளன. அதே நேரத்தில், ராகு-கேதுவின் நிலையும் அமோகமாக உள்ளது. இதனால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இன்றைய நாள் உள்ளது. இந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்: தீங்கு விளைவிக்கும் கிரகமான ராகு 14 பிப்ரவரி 2022 அன்று ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார் மற்றும் ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிரனும் ராகுவும் நட்பு கிரகங்கள் என்பதால் இந்த நிலை சுப பலன்களைத் தரும். இதன் காரணமாக ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியைத் தரும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். காதல் துணையுடன் உறவு சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 

விருச்சிகம்: விருச்சிக ராசியில் கேது இருப்பது உங்களுக்கு நன்மைகளைத் தரும். நெருங்கியவர் உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவார். பணியிடத்தில் முன்னேற்றம் காண புதிய வாய்ப்புகள் அமையும். புதிதாக திருமணமான இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம்.

தனுசு: இன்று தனுசு ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் இணைகிறது. ஜோதிடத்தில், சுக்கிரன் காதல், ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது, அதே நேரத்தில் செவ்வாய் ஆற்றல் காரணியாக உள்ளது. இந்த நிலை இந்த ராசிக்காரர்களுக்கு காதல், வியாபாரம் இரண்டிலும் நல்ல பலன்களைத் தரும். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் தரும்.

மகரம்: பிப்ரவரி 14, 2022 அன்று, சனி மற்றும் புதன் இணைவு மகர ராசியில் உள்ளது. இந்த சூழ்நிலை வீட்டு வேலைகள் முதல் பணியிடம் வரை சுப பலன்களைத் தரும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் செய்யலாம். எந்த வேலையிலும் வெற்றி பெறுவீர்கள். காதல் துணையுடன் நல்ல நாள் அமையும்.

கும்பம்: தேவ குரு வியாழன் மற்றும் சூரிய கிரகம் கும்பத்தில் அமர்ந்துள்ளன. வியாழன் மிகவும் மங்களகரமான கிரகம். இது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு மரியாதை கிடைக்கும். வெற்றி பெறும் தினம் இன்று உங்களுக்கு.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More