Home> Lifestyle
Advertisement

See Pics: இணையத்தை கலக்கும் ஒற்றை கண்ணுடைய மரத்தின் புகைப்படம்!!

ஒரு ஆந்தை ஒரு மரத்தில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு அதிர்ச்சியூட்டும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!

See Pics: இணையத்தை கலக்கும் ஒற்றை கண்ணுடைய மரத்தின் புகைப்படம்!!

ஒரு ஆந்தை ஒரு மரத்தில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு அதிர்ச்சியூட்டும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், ஒற்றை கண் ஆந்தை ஒரு மரத்தில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு அதிர்ச்சியூட்டும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த புகைப்படத்தை சமீபத்தில் இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசாந்தா நந்தா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இது ட்விட்டரில் வேரலெவலில் வைரளாகியுள்ளது. நாங்கள் பேசும் படம், “ஒற்றை கண்ணுடைய மரம்” என்ற தலைப்பில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் பார்க்கும் சிறந்த உருமறைப்பு ஒன்று. (ஸ்க்ரீச் ஆந்தை) (sic) என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ | See Pics: ரொமான்ஸ் மூடில் பகவான் கிருஷ்ணா... பிகினி உடையில் கோபியர்கள்...

ஒரு அறியவகை ஆந்தை ஒரு மரத்தில் உட்கார்ந்து எதிர்நோக்குவதைக் காட்டுகிறது. அந்த ஆந்தைக்கு ஒரு கண் மட்டுமே தெரியும் மற்றும் கவனமாகப் பார்த்த பிறகு தான் நீங்கள் பறவையின் கொக்கைக் கண்டுபிடிக்க முடியும். ஆந்தை மற்றும் மரத்தின் நிறங்கள் மிகவும் ஒத்திருக்கின்றன, அவை இரண்டையும் வேறுபடுத்துவது கடினம். 

இது நாங்கள் மட்டுமல்ல, நெட்டிசன்களும் படத்தை நேசித்தார்கள். இது ஒரு சில மணி நேரங்களுக்குள் 1,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் நிறைய கருத்துகளையும் மறு ட்வீட்ஸையும் பெற்றது. 

Read More