சமூக ஆர்வலரும், பத்திரிக்கையாளருமான திருநங்கை அப்சரா ரெட்டி அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
திருநங்கை அப்சரா ரெட்டி அதிமுக கட்சியில் இணைந்து பணியாற்றி உள்ளார். செல்வி ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக கட்சியில் பிளவு ஏற்ப்பட்டதால், அதிமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த இரண்டு வருடமாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வரும் திருநங்கை அப்சரா ரெட்டிக்கு, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியை தனது, அவரை காங்கிரஸ் கட்சி பெருமை படுத்தி உள்ளது.
நாட்டின் தேசிய கட்சியான காங்கிரஸ், முதல் முறையாக கட்சியின் முக்கிய பதவியில் ஒரு திருநங்கை நியமித்து உள்ளது.
Welcoming Apsara Reddy to @MahilaCongress
— All India Mahila Congress (@MahilaCongress) January 8, 2019
As @sushmitadevmp puts it the path for inclusivity comes through acceptance and compassion beyond the set societal norms.#Womenpositive https://t.co/pG3AnmPc6J