Home> Lifestyle
Advertisement

திருப்பதி லட்டு விலை இருமடங்காக உயர்வு!

திருப்பதி கோயிலில் சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்படும் லட்டு, வடையின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. 

திருப்பதி லட்டு விலை இருமடங்காக உயர்வு!

திருப்பதி கோயிலில் சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்படும் லட்டு, வடையின் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. 

திருப்பதி கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழக்கப்பட்டு வருகிறது. இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ரூ.10க்கு 2 லட்டுகளும், மலைபாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ. 10க்கு 2 லட்டுகளும், கூடுதலாக ரூ.25க்கு 1 லட்டு என வழங்கப்படுகின்றன. மேலும் ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் தற்போது சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்படும் லட்டு உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறிய லட்டு விலை ரூ.25ல் இருந்து ரூ.50 ஆகவும், பெரிய லட்டு விலை ரூ.100ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது.

Read More