மம்மூட்டி நடிக்கும் 'மதுரராஜா' படத்திலும் தமிழில் விஷால் நடிக்கும் 'அயோக்யா' படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுகிறார் சன்னி லியோன்...
பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறார்.
மேலும் தற்போது சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை இணைய தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இதை தவிர தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார். வரலாற்று கதையில் உருவாகும் இப்படத்தை வடிவுடையான் இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து, மலையாளத்திலும் 'ரங்கீலா' எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.
இந்தப் படத்தை சந்தோஷ் நாயர் என்பவர் இயக்க பேக்வாட்டர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது. அது மட்டுமல்லாது மம்மூட்டி நடிக்கும் 'மதுரராஜா' படத்திலும் தமிழில் விஷால் நடிக்கும் 'அயோக்யா' படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறார். சன்னி லியோனுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் ஒரு முறை கொச்சிக்கு இவர் வந்திருந்தபோது இவரைக் காண இவரது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்போது மலையாள படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Hey everyone.. I'm going to make my Debut in Malayalam Film industry in "Rangeela"
— Sunny Leone (@SunnyLeone) January 23, 2019
Shoot for the same starts from first week of February.
The film is directed by Santosh Nair and produced by Jayalal Menon under the banner - Backwater studios pic.twitter.com/VOu6Ngigjb
இந்நிலையில், சன்னிலியோன் தனது ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில், "ஹே எல்லோரும் வணக்கம்.... நான் மலையாள திரைப்பட துறையில் எனது பயணத்தை துவக்க உள்ளேன் "ரங்கீலா"
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலை பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்க உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் நாயர் இயக்குகிறார் என்று தெரிவித்துள்ளார்.