Home> Lifestyle
Advertisement

அதிர்ச்சியூட்டும் செய்தி: கழிவறை நீரில் பானி பூரி..! வெளியான சிசிடிவி காட்சி..!

தெரு-பக்க பானி பூரி கடைகளில் பானி-பூரி தயாரிக்கும் ரகசியம் வெளிவருவது இது முதல் முறை அல்ல.

அதிர்ச்சியூட்டும் செய்தி: கழிவறை நீரில் பானி பூரி..! வெளியான சிசிடிவி காட்சி..!

மும்பை: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பானி பூரி (Pani Puriஎன்பது பலருக்கும் நெருக்கமான உணவாக தற்போதைய சூழலில் மாறி உள்ளது. ல்வேறு கடைகளில், அந்த உணவை சுகாதாரமற்ற முறையில், தயாரிக்கின்றனர்.

அந்தவகையில் மும்பை கோல்ஹாபூரில் உள்ள ரன்கலா ஏரிக்கு அருகில், பானி பூரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனை செய்யும் பானி பூரி சுவையாக இருப்பதாக கூறி, மக்கள் கூட்டம் இங்கு அலைமோதுவது வழக்கம். இந்த சுவையை ரசித்து சாப்பிட்டு வந்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான விஷயம் தெரியவந்தது. பானி பூரி கடைக்காரரின் இந்த கேவலாமா வீடியோ கிளிப் ஒன்று வெளியாகியுள்ளது. 

 

ALSO READ | பானி பூரி பிரியர்களுக்கு நற்செய்தி.... புழக்கத்திற்கு வந்த பானி பூரி ATM..!

fallbacks

அந்த கடையின் ஊழியர், பானி பூரியின் தண்ணீரில், கழிவறையில் உள்ள நீரை கலந்துள்ளார். இந்த விஷயம் அங்கிருந்து சி.சி.டி.வி-யில் பதிவாகிய நிலையில், இதுதொடர்பான வீடியோவும், இணையத்தில் வைரலாகி பரவியது. இதனைப் பார்த்த வாடிக்கையாளர்கள், அக்கடையில் பெரும் ரகளையில் ஈடுபட்டு அங்கிருந்த பொருட்களையும், தெருவில் வீசினர்.

'மும்பை கே ஸ்பெஷல் பானி பூரி வாலா' என்று பெயரிடப்பட்ட இந்த தெரு பக்க கடை தினமும் கோலாப்பூரில் உள்ள ராணிபால் ஏரியில் இயங்குகிறது. கடைக்கு முன்னால், பானிபுரி சாப்பிட மக்கள் கூட்டம் எப்போதும் அதிகரித்தே காணப்பட்டது.

 

ALSO READ | எச்சரிக்கை! கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ‘பானி பூரி’ விற்க தடை...

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More