Home> Lifestyle
Advertisement

சனியின் ராசி மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும்

கிரகங்களின் ராசி மாற்றம் சிலருக்கு சாதகமாக இருக்கும் அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு தீங்கு விளைவிக்கும். சனிபகவானின் ராசி மாற்றத்தால் எந்தெந்த நபர்களுக்கு லாட்டரி அடிக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

சனியின் ராசி மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகத்தின் ராசி மாற்றம் 12 ராசிக்காரர்களுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதேபோல், நீதியின் கடவுளான சனியின் பெயர்ச்சி மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். அதன்படி 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் ஏப்ரல் மாதம் தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். இந்த ராசி மாற்றம் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது. சனியின் இந்த ராசி மாற்றம் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. 

2022ல் சனிப் பெயர்ச்சி இல்லை என்றாலும், அவரின் நீண்ட அதிசார மற்றும் வக்ர பெயர்ச்சியின் காரணமாக தற்போது மோசமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் நற்பலனும், நற்பலன் அனுபவிக்கும் சில ராசிகளுக்கு கெடுபலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜூலை 12 க்குப் பிறகு, சனி வக்ர பெயர்ச்சியாக மீண்டும் தனது சொந்த ராசியான மகரத்தில் நுழையும். இதனுடன், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும், சிலருக்கு சுப பலன்களையும் ஏற்படுத்தும். தற்போது சனிபகவான் 3 ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப் போகிறார்.

சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் செல்வ வளம் பெறுவார்கள்

மிதுனம்: ஜோதிடத்தின்படி, சனிபகவான் இந்த ராசியில் அதிஷ்ட ஸ்தானத்தில் சஞ்சரித்துள்ளார். எனவே, இந்த ராசிக்காரர்கள் சனி தசையிட இருந்து விடுதலை பெற்றுள்ளனர். சனி கும்ப ராசிக்கு செல்வது இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கும். இவர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். வாழ்க்கையில் கடின உழைப்பைக் குறைக்க வேண்டும், மேலும் வெற்றிக்கான பல வழிகள் திறக்கப்படும். அதே சமயம் இவர்களும் களத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

அதேபோல் தடைபட்ட திட்டங்கள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கு சாதகமான பலன் கிடைக்கும். இந்த சனிப் பெயர்ச்சியால் எதிரி கட்சி தோற்கடிக்கப்படும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படலாம், எனவே முழு கவனம் தேவை.

துலாம்: துலாம் ராசியில் சனிபகவான் சுக ஸ்தானத்திலும் ஐந்தாமிடத்தில் அமர்வதால் இந்த ராசிக்காரர்கள் சனி தசையில் இருந்து விடுதலை கிடைக்கும். இந்த ராசி மாற்றம் நல்ல பலன் தரும். இந்த காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளது. வேலை அல்லது குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லலாம். மாணவர்கள் கடின உழைப்பால் வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில், திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும்.

தனுசு: ஜோதிடத்தின்படி, இந்த ராசியில் செல்வம் மற்றும் வலிமைக்கு அதிபதி சனி கிரகம். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய அத்தியாயம் தொடங்கும். தடைபட்ட பழைய காரியங்களில் வெற்றி கிடைக்கும். அதே சமயம் பொருளாதார நிலையும் வலுவாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் இந்த நேரத்தில் செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் தாயின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More