Home> Lifestyle
Advertisement

நீங்கள் SBI வாடிக்கையாளரா? உங்களுக்கான முக்கியமான செய்தி இது

ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ புதிய முயற்சியை எடுத்துள்ளது. 

நீங்கள் SBI வாடிக்கையாளரா? உங்களுக்கான முக்கியமான செய்தி இது

SBI New Rule: வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் முக்கியமான செய்தி!! ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ புதிய முயற்சியை எடுத்துள்ளது. 

வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ ஏடிஎம்மில் (SBI ATM) இருந்து பணம் எடுக்க OTP-ஐ உள்ளிட வேண்டும்.

இந்த புதிய விதியில் OTP இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாது. பணம் எடுக்கும் நேரத்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் OTP பெறுவார்கள். அதை உள்ளிட்ட பின்னர்தான் வாடிக்கையாளரால் ATM-ல் இருந்து பணத்தை எடுக்க முடியும்.

வங்கி ட்வீட் மூலம் தகவலை தெரிவித்தது

இந்த தகவலை வங்கி ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. அந்த ட்வீட்டில், 'எஸ்பிஐ ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான எங்களது OTP அடிப்படையிலான பணம் எடுக்கும் முறை, மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசியாகும். மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். OTP அடிப்படையில் பணத்தை எடுக்கும் முறை எவ்வாறு செயல்படும் என்பதை SBI வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.’ என்று வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கான விதி என்ன?

ரூ. 10,000 மற்றும் அதற்கு மேலான தொகையை எடுக்கும்போது இந்த விதிகள் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம்களில் இருந்து ஒவ்வொரு முறையும் ரூ. 10,000 மற்றும் அதற்கு மேல் பணத்தை எடுக்க, அவர்களுடைய வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓ.டி.பி மற்றும் டெபிட் கார்டு பின் ஆகியவற்றின் மூலம் வங்கி அனுமதி அளிக்கும். 

ALSO READ | Bank Strike: நாடு முழுவதும் 2 நாட்களுக்கு வங்கிகளின் வேலை நிறுத்தம், முக்கிய விவரங்கள் இதோ 

செயல்முறையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

 - எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க OTP தேவைப்படும்.

- இதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.

- இந்த OTP நான்கு இலக்க எண்ணாக இருக்கும். இதை வாடிக்கையாளர் ஒரு முறை பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். 

- நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை ஏ.டி.எம்-மில் உள்ளிட்டதும், ஏடிஎம் திரையில் OTP-ஐ உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.

- பணம் எடுப்பதற்கு, வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ உள்ளிட வேண்டும்.

இந்த செயல்முறைக்கு என்ன தேவை என வங்கி அளித்த விளக்கம்

வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கும் வகையில் வங்கியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI இந்தியாவில் 71,705 BC அவுட்லெட்டுகளுடன் 22,224 கிளைகள் மற்றும் 63,906 ATM/CDM கொண்ட மிகப்பெரிய நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. இணைய வங்கி (Internet Banking) மற்றும் மொபைல் வங்கியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தோராயமாக 91 மில்லியன் மற்றும் 20 மில்லியன் ஆக உள்ளது. 

ALSO READ | SBI News: இந்த கணக்கு உங்ககிட்ட இருக்கா? இதில் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More