Home> Lifestyle
Advertisement

Zoom கூட்டத்தின் போது நேரலையில் செயலாளருடன் உடலுறவு கொண்ட பெண் அதிகாரி..!

ஜூம் கூட்டத்தின் போது செயலாளருடன் உடலுறவு கொண்டதாக பிலிப்பைன்ஸ் அரசாங்க அதிகாரி பிடிபட்டார்..!

Zoom கூட்டத்தின் போது நேரலையில் செயலாளருடன் உடலுறவு கொண்ட பெண் அதிகாரி..!

ஜூம் கூட்டத்தின் போது செயலாளருடன் உடலுறவு கொண்டதாக பிலிப்பைன்ஸ் அரசாங்க அதிகாரி பிடிபட்டார்..!

ஜூம் செயலி மூலம் நடந்த வீடியோ கான்பெரன்ஸ் கூட்டத்தின் போது, பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு அரசு அதிகாரி தனது செயலாளருடன் பகிரங்கமாக சல்லாபத்தில் ஈடுபட்டு பிடிபட்டார். பிலிப்பைன்ஸில் உள்ள காவிட் மாகாணத்தில் உள்ள பாத்திமா டோஸ் கிராம சபையின் கேப்டன் ஜீசஸ் எஸ்டில் (Jesus Estil), தனது கேமரா இருப்பதை அறியாததால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அந்த நபர் அறையின் ஒரு மூலையில் மிக நெருக்கமாக உடலுறவில் ஈடுபட்டதாக காட்சிகள் காட்டுகின்றன. உண்மையான செயலில் ஈடுபடுவதற்கு முன்பு, எஸ்டில் கேமராவை அணைக்க முயற்சி செய்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 26 அன்று நடந்த அழைப்பு வழக்கமான சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

ALSO READ | கல்லூரி மாணவர் சேர்க்கை தகுதி பட்டியலில் சன்னி லியோன்... மகிழ்ச்சியில் மாணவர்கள்!!

fallbacks

கேமரா இயக்கப்பட்டிருப்பதை அறியாத எஸ்டில் மற்றும் அந்தப் பெண் தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்டிருந்த சமயத்தில், மற்ற பங்கேற்பாளர்கள் சபைக் கூட்டத்தைத் தொடர்ந்தனர். அறையின் தூர மூலையில் தனது பணியை முடித்த பின்னர் எஸ்டில் மீண்டும் அழைப்பில் இணைந்து கொண்டார். ஆனால், அழைப்பில் கலந்து கொண்ட ஒரு உறுப்பினர் அந்த காட்சியைப் பதிவுசெய்தார். இதனால் அந்த வீடியோ இறுதியில் பகிரங்கமானது. இதைக்கண்ட சில கிராமவாசிகள் முறைகேடாக அதிகாரியை வெளியேற்ற ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். 

இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட இந்த ஜோடி மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் நாட்டின் உள்துறை மற்றும் உள்ளாட்சித் துறை எஸ்டிலை தனது கடமையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. “இது எளிமையான தவறான நடத்தை அல்ல. ஆனால் மிகக் கடுமையான குற்றம்” என்று டிஐஎல்ஜி பரங்கே விவகாரங்கள் சம்மன் மற்றும் புகார்கள் தலைவர் ரிச்சர்ட் ஜெரோனிமோ கூறியுள்ளார்.

Read More