Home> Lifestyle
Advertisement

ஓய்வுக்குப் பிறகு என்ஜாய்.. ஆடம்பரமாக இருக்கலாம், அளவில்லா வருமானம் கிடைக்கும்

என்பிஎஸ் மூலம் ரூ.5 கோடி நிதியை உருவாக்க முடியும். 2.5 லட்சம் மாத ஓய்வூதியத்தின் பலனையும் நீங்கள் பெறலாம். எப்படி, எப்போது, ​​எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.

ஓய்வுக்குப் பிறகு என்ஜாய்.. ஆடம்பரமாக இருக்கலாம், அளவில்லா வருமானம் கிடைக்கும்

ஓய்வூதியத் திட்டம்: நீங்கள் வேலைக்கு செல்லும் ஒரு நபர் என்றால் உங்களது ரிட்டயர்மென்ட் பற்றிய கவலை நிச்சயமாக உங்களுக்கு இருக்கும். இதன் காரணமாக பலர் ரிட்டயர்மென்ட் பிளானிங் செய்வதுண்டு, ஆனால் அதற்கு இப்போதிலிருந்து உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் மற்றும் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து நீங்கள் யோசிக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரமாக நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களது முதலீடு ஒவ்வொரு மாதமும் குறையும்.

அந்த வகையில் ரிட்டயர்மென்ட் பிளானிங் ஆப்ஷன்களில் இருக்கக்கூடிய சிறந்த திட்டங்களில் ஒன்று NPS (National Pension System). தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மூலம், சிறிய முதலீடுகளில் பெரிய நிதியை உருவாக்க முடியும். இருப்பினும், இதற்கு நீண்ட கால முதலீடு தேவைப்படுகிறது.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கான ஜாக்பாட்.. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த புதிய அப்டேட் வந்தாச்சி 

இந்த திட்டத்தைப் பற்றிய விரிவான தகவல்கள்:
NPS இன் மெச்சூரிட்டி வயது 60 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் கூட்டுத்தொகை அடிப்படையில் வட்டி வழங்கப்படுகிறது. குறைந்த முதலீட்டில் கூட கோடிக்கணக்கான மதிப்புள்ள நிதிகளை சேகரிக்க இது உங்களுக்கு உதவும். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. 18 வயது முதல் 70 வயது வரை உள்ள எவரும் இந்த திட்டத்தின் பயனைப் பெறலாம். இந்த திட்டத்தில், முதலீட்டாளர்கள் மொத்தத் தொகையில் 60% கார்பஸ் மட்டுமே எடுக்க முடியும். அதேசமயம் 40% தொகை ஆண்டுத் தொகையில் செல்கிறது.

முழு கணக்கீடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
ஒரு நபர் 25 வயதில் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) இல் முதலீடு செய்யத் தொடங்கினால். 35 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.13,260 டெபாசிட் செய்தால், அவர் 60 வயதை அடையும் போது சுமார் ரூ.35 லட்சம் முதலீடு செய்திருப்பார். இதன்படி தினமும் சுமார் ரூ.450 சேமிக்க வேண்டும். அசல் தொகைக்கு சராசரியாக 10% வட்டி, கூட்டுத்தொகையின் அடிப்படையில் ஆண்டுதோறும் கிடைக்கும். இதன்படி 35 ஆண்டுகளில் மொத்த வட்டித் தொகை ரூ.4.55 கோடி மட்டுமே. மொத்தம் 5 கோடி ரூபாய் நிதி திரட்டப்படுகிறது. நீங்கள் ரூ.3 கோடி மட்டுமே எடுக்க முடியும். 2 கோடி தொகை வருடாந்திர திட்டத்திற்கு செல்லும். ஆண்டுத் திட்டத்தின் மூலம் மட்டுமே வாழ்நாள் ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவீர்கள். 60 வயதிற்குப் பிறகு, நீங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தின் பலனைப் பெறலாம், சுமார் 2.5 லட்சம் ரூபாய் ஆகும்.

ரிட்டயர்மென்ட் ஆவதற்கு முன்பே பணத்தை வித்ட்ரா செய்ய முடியுமா?
உங்களுக்கு 60 வயது ஆகும்பொழுது மட்டுமே தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) மெச்சூரிட்டி ஆகும். இது போன்ற சூழ்நிலையில் உங்களது தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) பணத்தை 60 வயதிற்கு முன்பு உங்களால் வித்ட்ரா செய்ய முடியாது. எனினும் உங்களுக்கு ஏதேனும் அவசரகால சூழ்நிலை ஏற்பட்டால் அல்லது உடல் நலக்குறைவு, வீடு கட்டுவது, பிள்ளைகளின் படிப்பு போன்ற விஷயங்களுக்காக சிறிய அளவு பணத்தை வித்ட்ரா செய்யலாம். இருப்பினும் பணத்தை வித்ட்ரா செய்வதற்கான விதிகள் அவ்வப்போது மாறுபடும். எனவே பணத்தை வித்ட்ரா செய்வதற்கு முன்பு NPS விதிகளை படிக்கவும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கிடுகிடுவென உயரும் தங்கம் விலை.. ஆனா தங்க நகை கடன் வாங்குவோருக்கு ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More