Home> Lifestyle
Advertisement

மீனவருக்கு ஜாக்பாட்!!! ஒரு கிலோ ரூ.10,000 என 2 லட்சத்துக்கு விலை போன மயூரா மீன்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் அறியவகை மீன் ஒன்றை 2 லட்சத்திற்கு விற்றுள்ளார்.

மீனவருக்கு ஜாக்பாட்!!! ஒரு கிலோ ரூ.10,000 என 2 லட்சத்துக்கு விலை போன மயூரா மீன்

புவனேஸ்வர்: ஒடிசாவின் ராஜ்நகரின் தல்சுவா பகுதியில் இருந்து ஒரு தனித்துவமான மீன் பிடிக்கப்பட்டு உள்ளது. இது திகாவில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு ஒரு கிலோ ரூ.10,000 என்ற விகிதத்தில் விற்கப்பட்டது. இந்த மீனின் விலை சுமார் 2 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த மீனை மயூரா மீன் (Mayura Fish) என்று அழைக்கப்படுகிறது. இந்த அரிய இனத்தின் மீன்களைக் காண உள்ளூர்வாசிகள் ஏராளமானோர் அங்கு கூடினர். இந்த மீன் விற்கப்படுவதற்கு முன்பு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்த மீன் கடல் மீன்களின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் விலையுயர்ந்த வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மீன்களின் சராசரி அளவு 30 முதல் 60 பவுண்டுகள் ஆகும்.

இதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம், ஒடிசாவின் சாண்ட்வாலி பகுதியில் ட்ரோன் சாகர் என்ற தனித்துவமான மீன் ஒரு மீனவரின் வலையில் சிக்கியது. பின்னர் அந்த மீனை ஒரு மருந்து நிறுவனம் 7 லட்சத்து 49 ஆயிரத்திற்கு வாங்கியது.

Read More