Home> Lifestyle
Advertisement

நவராத்திரி 8ம் நாள்.. பூஜை நேரம், நைவேத்தியம், அலங்காரம் விவரம்

Navaratri 2023 Day 8: நவராத்திரியின் அஷ்டமி அதாவது எட்டாவது நாளான இன்று துர்கையை வழிபடுவதற்கு உகந்த நாள். இந்த தினத்தை அஷ்டமி திதி, மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்றே அழைக்கப்படுகிறது.   

நவராத்திரி 8ம் நாள்.. பூஜை நேரம், நைவேத்தியம், அலங்காரம் விவரம்

நவராத்திரி பண்டிகை எட்டாம் நாள் சிறப்பு வழிப்பாடு விவரம்: நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி (Navaratri 2023) பண்டிகை, அக்டோபர் 15 ஆம் தேதி அதாவது கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி அன்று  கோலாகலமாக தொடங்கப்பட்டது. வரும் அக்டோபர் 23 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 24 ஆம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

நவராத்திரி பண்டிகை எட்டாம் நாள் 2023:

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். ஒன்பது நாளும் ஒன்பது வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள்.

நவராத்திரியின் ஒன்பது நாட்கள்:

நவராத்திரியின் (Navaratri) ஒன்பது நாட்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்கா தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ணமையமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படும். பெண்கள் 9 நாட்களும் தங்களை அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர்.

மேலும் படிக்க | சனிக்கிழமையில் ‘இதை’ மட்டும் செய்யவே கூடாது..! மீறினால் துரதிர்ஷ்டம் கன்ஃபார்ம்..!

நவராத்திரி பூஜை:

நவராத்திரியின் மிக முக்கியமான நிறைவு பகுதியை அடைந்துள்ளோம். நவராத்திரியின் எட்டாம் நாள் அதாவது அஷ்டமி திதி, துர்கையை வழிபடுவதற்கு உகந்த நாள். நவராத்திரியின் 8 ம் நாளில் அம்பிகையை வழிபடுவதால் வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான துன்பங்களும் நீங்குவதுடன், எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். 

 

நவராத்திரி பூஜை எட்டாவது நாள்:
அம்பாள்: நரசிம்ம தாரினியை அலங்கரித்து வழிபட வேண்டும். 
கோலம்: பத்ம வகை கோலம் போட்டு வழிபட வேண்டும்.
மலர்கள்: ரோஜா பூ மற்றும் மருதாணி இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம்: பால் சாதம், பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்
பாட வேண்டிய ராகம் புன்னாகவராளி.
பழங்கள்: திராட்சை பழத்தை படைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். 

இன்றைய தினம் ஒன்பது வயதுள்ள பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை துர்கையாக பாவித்து பூஜை செய்து, அவர்களுக்கு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருள்களை வழங்கி மகிழ்விக்கவேண்டும்.  நவராத்தியின்போது பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் ஓன்பது வகைகளில் படைக்க வேண்டும். 

பலன்கள் :
நவராத்திரியின் எட்டாம் நாளில் துர்கையை வழிபடுவதால் வாழ்க்கையில் நமக்கு ஏற்படக் கூடிய பிரச்சனைகளை உடனடியாக நீங்கி, நலன்கள் கிடைக்கும். தீயசக்திகள் அழியும், வெற்றி கிடைக்கும், மனதில் இன்பம் ஏற்படும், இன்பமயமான வாழ்க்கை அமையும்.

மேலும் படிக்க | ‘இந்த’ 4 ராசிக்காரர்கள் சிறந்த தலைவர்களாக உருவெடுப்பர்..! எந்தெந்த ராசிகள் தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More