Home> Lifestyle
Advertisement

உங்கள் வாழ்க்கையில் பண மழை பெய்ய வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!

உங்கள் வாழ்க்கையில் பணம் கொட்ட வேண்டுமா? அதற்கு சில வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.   

உங்கள் வாழ்க்கையில் பண மழை பெய்ய வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!

சமீப காலமாக Manifesting என்ற வார்த்தை ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு அர்த்தம், நாம் நமக்கு கிடைக்க வேண்டும் நினைக்கும் ஒன்று, உண்மையாகவே நம் கையில் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கான வேலைகளை நாம் மன ரீதியாக செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, பணம் வேண்டுமென்றால் அது வேண்டும் என முழு மனதுடன் கிடைக்க வேண்டும் என நினைக்க வேண்டும். இது ஏற்கனவே இருக்கும் ஒன்றை அறிந்து கொள்ளும் செயல்தான். இந்த நடைமுறை தனிப்பட்ட வளர்ச்சி, மேம்பாடு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உங்கள் நிதிக் கனவுகளை அடைய உங்களுக்கு உதவுகிறது. உங்கள் ஆன்மா, மனம் மற்றும் உடலை சீரமைப்பதன் மூலம், நிதி வளத்தை நீங்கள் அடையலாம். 

வாழ்க்கையில் பணத்தை அடைய என்ன செய்ய வேண்டும்? 

பணத்தை அடைய நீங்கள் உங்கள் மனதில் விதைக்கும் எண்ணங்கள் ஆழ்ந்ததாக இருக்க வேண்டும். உங்களது செயல், நோக்கங்கள் ஆகியவை பணத்தை உங்களை நோக்கி ஈர்க்கும் வகையில் செய்பவையாக இருக்க வேண்டும். இந்த செயல்முறை, உங்களது மன மாற்றத்துடன் தொடங்குகிறது. செல்வத்தை உங்கள் வாழ்க்கைக்குள் ஈர்ப்பது, அதற்கான சாத்தியக்கூறுகளை நம்புவது மற்றும் அது ஏற்கனவே உங்கள் எல்லைக்குள் இருப்பதை அங்கீகரிப்பது போன்றவையால் இந்த மனமாற்றம் நிகழும். இந்த மனமாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள தினசரி வாழ்க்கையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அவை என்னென்ன தெரியுமா? 

உங்கள் பர்ஸை சுத்தப்படுத்த வேண்டும்!

உங்கள் பணப்பை அல்லது பர்ஸில் பணத்தை விட அதிகமாக பல விஷயங்கள் இருக்கும். அதை சுத்தம் செய்வதனால் பணம் தடையில்லாமல் வருவதற்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம்.  உங்கள் பணப்பையை சுத்தம் செய்வது தடைகள் மற்றும் ஆற்றல் தடைகளை நீக்குகிறது. உங்கள் பணத்தை நேர்த்தியாக ஒழுங்கமைத்து, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும்போது, மிகப்பெரிய க்ரீன் சிக்னலை நீங்கள் இந்த யுனிவர்ஸிற்கு அனுப்புகிறீர்கள். அதன் செயல்திறனை அதிகரிக்க இந்த செயல்முறையை அடிக்கடி செய்ய வேண்டும். 

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு செம ஜாக்பாட்.. வட்டியை அள்ளித் தரும் SCSS திட்டம்

இலக்குகளை வைத்துக்கொள்ளுங்கள்:

பணம் உங்கள் வாழ்க்கையில் வர வேண்டும் என்றால் அதற்கு திசை தேவை. உங்கள் பணத்தின் நோக்கத்தை தெளிவாக வரையறுக்கவும், அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். பணம் உங்கள் கையில் இருந்தால் அதை எப்படி செலவு செய்வீர்கள், எதில் அதை முதலீடு செய்வீர்கள் என்பதை மைண்ட் மேப் ஆக போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இது கண்டிப்பாக பணத்தை உங்கள் பக்கம் ஈர்க்க வழிவகை செய்யும். 

உங்கள் மனதுடன் ஒத்துப்போகிறவர்களுடன் பழகுங்கள்:

செல்வத்தை உங்கள் வாழ்வில் வரவேற்க வேண்டும் என்றால் நீங்கள் ஏற்கனவே பணம் உங்கள் கையில் இருப்பது போன்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களை போலவே மனம் ஒத்த மனிதர்களுடன் பழகுங்கள். உங்கள் தினசரி செயல்களை அப்க்ரேட் செய்யுங்கள். 

பாசிடிவாக பேசுங்கள்:

உங்களுக்குள் நீங்கள் பேசிக்கொள்ளும் போது கண்டிப்பாக கண்டிப்பாக பாசிடிவாக பேச வேண்டும். உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை விட்டொழித்து அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நடக்கும் என்று நம்புங்கள். 

மேலும் படிக்க | பித்தப்பையில் கல் இருக்கா? அப்போ இந்த 'மேஜிக்' மூலிகை போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More