Home> Lifestyle
Advertisement

உங்கள் கணவர் உங்களை மதிப்பதில்லையா..? வழிக்கு கொண்டு வர 5 டிப்ஸ்!

Marriage Life Tips: பெண்கள் பலருக்கு தனது கணவர் தன் பேச்சை கேட்பதில்லை என்பது பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது. அவரை உங்கள் வழிக்கு கொண்டு வர என்ன சில டிப்ஸ் இதோ. 

உங்கள் கணவர் உங்களை மதிப்பதில்லையா..? வழிக்கு கொண்டு வர 5 டிப்ஸ்!

காதல், திருமண உறவுகள் மட்டுமன்றி, எந்த உறவை எடுத்துக்கொண்டலும் அதை நல்ல முறையில் நடத்த சம்பந்தப்பட்ட இருவருமே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவர் இன்னொருவரின் வார்த்தைகளை மதிப்பதால், அந்த உறவு இன்னும் மேம்படுமே அன்றி, முறிவு ஏற்படாது. உலகளவில் பெரும்பாலான கணவன்மார்கள், தங்கள் மனைவிக்கு திருமணம் ஆன புதிதில் கொடுக்கும் மதிப்பையும் மரியாதையையும் அப்படியே குறைத்துக்கொண்டே போவதாக சில மனைவிமார்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். அப்படி, தன் பேச்சுக்கு செவி சாய்க்காமல் இருக்கும் கணவனை உங்கள் வழிக்கு கொண்டு வருவது எப்படி? இதோ சில டிப்ஸ். 

1.பேசுவதற்கான இடம்..

நீங்கள் இருவரும் அமைதியான மற்றும் இடையூறு இல்லாமல் உரையாடக்கூடிய நேரத்தையும் இடத்தையும் தேர்வு செய்யுங்கள். மனம் விட்டு பேச மற்றும் நேர்மையை ஊக்குவிக்கும் வசதியான அமைப்பைத் தேர்வு செய்யவும். இப்படி பேசுவதற்கான இடத்தையும் நேரத்தையும் நீங்கள் இருவரும் சேர்ந்தும் தேர்வு செய்யலாம். அப்படி தேர்வு செய்யும் நேரத்தில் உங்கள் கணவர் பிசியாக இருக்கிறாரா இல்லையா என்பதை சரிபார்த்து கொள்ளவும். 

2.தெளிவாக பேச வேண்டும்..

கணவன்-மனைவிக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் அதை தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள முதலில் முயற்சிக்க வேண்டும். எந்தவொரு உறவிலும் பேச்சுவார்த்தை என்பது இன்றியமையாத ஒன்றாகும். மேலும் உங்கள் கணவர் உங்கள் பேச்சைக் கேட்காதபோது அது வெறுப்பாகத்தான் இருக்கும். இதனால் சண்டைகள் வரலாம். ஆனால், இந்த காரணத்திற்காக சண்டை போட்டால் விரிசல் வளருமே அன்றி உறவு மேம்படாது. எனவே, உங்களுக்கு என்ன பிரச்சனை, அவர் இப்படி செய்வதால் உங்களுக்கு என்ன மாதிரியான உணர்வு ஏற்படுகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். 

மேலும் படிக்க | கணவனிடம் இந்த மூன்று விஷயங்களை செய்யாதீர்கள்... மனைவிகளுக்கு சில டிப்ஸ்!

3.அவர் பேசுவதை கவனமாக கேட்கவும்..

இருவருக்குள்ளும் வரும் பிரச்சனையில் எப்படி இருவருக்கும் தொடர்பு உள்ளதோ, அதே போல அதை தீர்க்கவும் இரண்டு பேருக்கும் கடமை இருக்கிறது. பிரச்சனைகளை தீர்க்க, காது கொடுத்து கேட்கும் பக்குவம் இருவரிடமும் இருக்க வேண்டும். அவர் கூறுவதை முதலில் நன்றாக கேளுங்கள். அவரிடத்தில் உங்களது முழு கவனத்தையும் கொடுங்கள். அப்படி அவர் பேச்சை நீங்க்ள கேட்கும் போது, அவர் மீது நீங்க்ள வைத்துள்ள மரியாதையையும் அன்பும் அவருக்கு புரியும். அவரோடு பேசுகையில் கண்ணோடு கண் பாருங்கள், அடிக்கடி தலையசையுங்கள். இப்படி, நீங்கள் முதலில் அவரை மதித்து, அவர் பேசுவதை கேட்கையில் அவருக்கும் நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். 

4.கூற விரும்புவதை தெளிவாக, சுருக்கமாக கூறவும்..

நீங்கள் தெரிவிக்க விரும்புவதைப் பற்றி நேரடியாகவும் துல்லியமாகவும் இருங்கள். உங்கள் எண்ணங்களைத் தெளிவுபடுத்தி அவற்றைத் தெளிவாக வெளிப்படுத்துங்கள். எந்த பிரச்சனையையும் நீளமாக எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை. “நீங்கள் அந்த சமயத்தில் அப்படி செய்தது எனக்கு இந்த மாதிரியான உணர்வை ஏற்படுத்தியது..” என்பதை மட்டும் தெளிவாக கூறுங்கள். உங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்த "நான்" என்ற வார்த்தையை பயன்படுத்தவும். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளும் வாக்கியங்களும் குற்றச்சாட்டாகவோ அல்லது மோதலாகவோ இல்லாமல் இருக்க வேண்டும். 

5.புரிதல்..

புரிந்துணர்வையும் அனுதாபத்தையும் ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குவது அவசியம். அவரது உணர்வுகள் மற்றும் கவலைகள் குறித்து அக்கறை காட்டவும். அவருடைய எண்ணங்களைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்கள் என்பது அவருக்கு புரிந்தால் அவர் உங்கள் மீது அதே அக்கறையை செலுத்தவும் உங்கள் பேச்சை கேட்கவும் அதிக வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | ஆண்களே..! காதலிக்கும் போது ‘இந்த’ 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More