Home> Lifestyle
Advertisement

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் ஆளி விதைகள்...

இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் என்பது உலகளவில் நிலவும் சுகாதார பிரச்சினைகளில் ஒன்றாகும். இந்த பிரச்சனை காரணமாக, தமனிகளில் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. 

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் ஆளி விதைகள்...

இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் என்பது உலகளவில் நிலவும் சுகாதார பிரச்சினைகளில் ஒன்றாகும். இந்த பிரச்சனை காரணமாக, தமனிகளில் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. 

இந்த பிரச்சினை சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது பக்கவாதம், இதயம், சிறுநீரகம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். உங்கள் இரத்த அழுத்தம் தொடர்ந்து 120/80 mmHg-ஐ விட அதிகமாக இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். மருந்துகளைத் தவிர, வாழ்க்கைமுறையில் எளிதான மாற்றங்களைச் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
 
உப்பு உட்கொள்ளலைக் குறைத்தல், அதிக பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, குப்பை உணவு, புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்ப்பது, எடையைக் கட்டுப்படுத்துவது போன்ற சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆளி விதைகள் (Flax Seeds) ஒரு வரமாகவும், இந்த விதைகள் மூலம் தங்கள் இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலும்.

பொட்டாசியம் உள்ளடக்கம் ஒரு வாசோடைலேட்டராக செயல்படுகிறது மற்றும் சிறுநீர் மூலம் அதிகப்படியான சோடியத்தை நீக்குகிறது. 100 கிராம் ஆளி விதைகளில் 813 மி.கி பொட்டாசியம் உள்ளது. இது மட்டுமல்லாமல், இந்த விதை இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த, எடை கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது, ஏனெனில் உடல் பருமன் இந்த நோய்க்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். கூடுதலாக, ஆளிவிதைகளில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது, இது அதிக இரத்த அழுத்தம் நோயாளிகளுக்கு அமிர்தமாக செயல்படுகிறது, ஏனெனில் இது உப்பின் விளைவைக் குறைக்கிறது. கூடுதலாக, உடலில் அதிகப்படியான சோடியம் நீர் சமநிலையை சீர்குலைத்து அதிக இரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கிறது.

Read More