நோபல் பரிசளிப்பு விழாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதி வேட்டி, சேலையில் வந்து, பரிசினை பெற்றது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!!
டெல்லி: அக்டோபர் மாத தொடக்கத்தில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளி அமெரிக்க பேராசிரியர் அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோ ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் கச்சேரி அரங்கில் விருதுகளைப் பெற்றனர். விழாவிற்கு, இந்த ஜோடி இந்திய ஆடைகளை அணியத் தேர்வுசெய்தது - பானர்ஜி பந்த்கலாவுடன் ஒரு தோதி மற்றும் குர்தா செட்டைத் தேர்ந்தெடுத்தார். அதே நேரத்தில் அவரது மனைவி டஃப்லோ ஒரு புடவையை அணிந்துள்ளார். அமெரிக்க பொருளாதார வல்லுனர் மைக்கேல் கிரெமருடன் சேர்ந்து "உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான அவர்களின் சோதனை அணுகுமுறைக்காக" அவர்கள் மதிப்புமிக்க விருதை வென்றனர்.
ட்விட்டரில் நோபல் பரிசு பகிர்ந்த வீடியோவில் மூவரும் தங்களது நோபல் பரிசுகளைப் பெறுவதைக் காட்டுகிறது. "இன்று நோபல் பரிசு விருது வழங்கும் விழாவில் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகியோர் பதக்கங்களையும் டிப்ளோமாக்களையும் பெறுகிறார்கள். வாழ்த்துக்கள்! உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான அவர்களின் சோதனை அணுகுமுறைக்காக அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான பரிசு வழங்கப்பட்டது," என்ற தலைப்பில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளனர்.
Watch Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer receive their medals and diplomas at the #NobelPrize award ceremony today. Congratulations!
— The Nobel Prize (@NobelPrize) December 10, 2019
They were awarded the 2019 Prize in Economic Sciences “for their experimental approach to alleviating global poverty.” pic.twitter.com/c3ltP7EXcF
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், அமெரிக்க பொருளாதார நிபுணருமான அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவியும் பிரெஞ்ச் பொருளாதார வல்லுநருமான எஸ்தர் டுப்லோ ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான பொருளாதார அறிவியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசளிப்பு விழா சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹாம் கன்சர்ட் ஹாலில் நடைபெற்றது. இந்த விழாவில் பரிசு பெற வந்த அபிஜித் மற்றும் அவரது மனைவி இந்திய பாரம்பரிய முறையில் உடையணிந்து வந்திருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
அபிஜித் பானர்ஜி, தங்க நிற பார்டர் வைத்த வேட்டியும், கருப்பு நிற மேல் கோட் அணிந்திருந்தார். அவரது மனைவியான எஸ்தர் பச்சை மற்றும் ஊதா நிறத்தால் ஆன சேலையும், சிவப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். இந்திய பெண்ணை போன்று எஸ்தர் புடவை அணிந்து வந்து, பரிசு பெற்றது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. டுவிட்டரிலும் இந்த தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.